Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 42

மலக்குமார்கள் ஓசை வடிவிலும் உரையாடுவார்கள்:

قَالَ ابْنُ هِشَامٍ ، وَحَدَّثَنِي مَنْ أَثِقُ بِهِ ” أَنَّ جِبْرِيلَ ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ

وَسَلَّمَ فَقَالَ : أَقْرِئْ خَدِيجَةَ السَّلامَ مِنْ رَبِّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :

” يَا خَدِيجَةُ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلامَ مِنْ رَبِّكِ ” ، قَالَتْ خَدِيجَةُ : اللَّهُ السَّلامُ وَمِنْهُ

السَّلامُ وَعَلَى جِبْرِيلَ السَّلامُ ” .

கதீஜா (ரலி) நபி (ஸல்) உடன் இருக்கும்போது நபி (ஸல்) கதீஜா (ரலி) இடம் ஜிப்ரஈல் இறைவன் உங்களுக்கு ஸலாம் கூறுவதாக சொல்கிறார் என்றார்கள்.  

💠 நபி (ஸல்) கதீஜா (ரலி) யிடம் ஜிப்ரஈல் உங்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகையை  நன்மாராயம் கூறுகிறார் என்றார்கள்.

இந்த சம்பவங்களில் நபி (ஸல்) விற்கு ஓசை மட்டுமே கேட்டது.

💠 ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்’ என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார்.

புஹாரி :2

💠 நபி (ஸல்) உறங்கும்போது யாரும் எழுப்ப மாட்டார்கள். ஒரு முறை நபி (ஸல்) தூங்கிக்கொண்டிருந்த போது சுபுஹ் நேரம் கடந்து விட்டதால் உமர் (ரலி) சத்தமாக தக்பீர் கூறிக்கொண்டே இருந்த சப்தத்தில் விழித்தார்கள் என ஹதீஸில் காண்கிறோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply