Home / இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ / இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 04| மௌலவி ஷுஐப் உமரி |

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 04| மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள்
01/04

தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்

மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி

ஹதீஸ்:

கால்நடைகள் புற் பூண்டுகளை சாப்பிடுவது போன்று பள்ளிவாசலில் பேசுவது நன்மைகளை அழித்து விடும்.

விமர்சனம்:

இது எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம் பெறாத அடிப்படையற்ற செய்தியாகும்.

இமாம் கஸ்ஸாலி “இஹ்யா உலூமித்தீன் 1/136” இல் இதனைப் பதிவு செய்துள்ளார். அவரது கிதாபிலுள்ள செய்திகளை பகுப்பாய்வு செய்த இமாம் இராகீ : “எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் நான் இதைக் காணவில்லை.” என்கிறார்.

தப்ஸீருல் கஷ்ஷாபுடைய ஹதீஸ்களை ஆய்வு செய்த
இமாம் இப்னு ஹஜர் இது பற்றி எதுவும் கூறவில்லை. 73/95 , 130/176

“இதற்கு ஒரு அறிப்பாளர் வரிசை கூட இல்லை” என்று
இமாம் ஸுப்கி தபகாதுஷ் ஷாபிஇய்யா 4/145 – 147 இல் கூறுகின்றார்.

“நெருப்பு விறகை அழிப்பது போன்று பள்ளிவாசலில் ஆகுமானவைகளைப் பேசுவது நன்மைகளை அழித்து விடும்.” என்றே இச்செய்தி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்…

Check Also

இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…

(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் …

Leave a Reply