Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 11

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 11

 
فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِّأَصْحَابِ السَّعِيرِ﴿١١﴾ 
 
(தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். நரக வாசிகளுக்குக் கேடுதான்). அல்முல்க் 67: 11  
  நிச்சயமாக மக்களின் குற்றங்கள்;  நிரூபணமாகும் வரை அவர்களுக்குத் தண்டனை கிடையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
                              அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரழி).
                              நூல்: அபூதாவூத், அஹ்மத்.
 
அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்களால் கண்ணுற்ற பின்பு அவைகளை ஏற்று விசுவாசம் கொள்வது பயனற்றதாக ஆகிவிடும். எனவே அவனது தண்டனைகள்,  அத்தாட்சிகள் வரும் முன்பு அவனை விசுவாசம்கொள்வது அவசியமாகும்.
ஃபிர்அவ்னின் நிலை பற்றி அல்லாஹ் கூறுகின்ற போது பின்வருமாறு கூறுகிறான்:
 

(கடலில் அவன் மூழ்கடிக்கப்படும் போது இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்,  நான் முஸ்லிம் என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்) இதற்கு முன் பாவம் செய்தாய் குழப்பம் செய்பவனாக இருந்தாய்). 

யூனுஸ் – 90, 91.
 
அதைவிடத் தெளிவாக இன்னுமொரு வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
(உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில் ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும்,  நம்பிக்கையோடு நல்லறங்கள் செய்தவர்ளையும் தவிர. எவருக்கும் அவரது நம்பிக்கை பயன் தராது).
அல் அன்ஆம் – 158.
தொடரும்……

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply