Home / TNTJ விற்கு மறுப்பு / பீ.ஜேவும் அவரைச் சார்ந்தவர்களும்…

பீ.ஜேவும் அவரைச் சார்ந்தவர்களும்…

_ஷெய்க் ரிஸ்வான் மதனி

பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வாமானால், அவரது அமைப்பு சுவனாகும்?

கட்டுரையை முடியும் வரை நிதானமாக படிக்கவும்

முன்னுரை:

தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களத்தில் பேசு பொருளாவும் , விவாத அரங்காகவும் மாறிவிட்ட சமாச்சாரமாக இருந்த பீ.ஜே.யின் ஹதீஸ் மறுப்புக் கொள்கை மற்றும் அவரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் தக்லீத்
எற்ற வழிகேடு திசை மாறி, தற்போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சகோதரர் பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வத்தின் நிலைக்கு மாற்றப்பட்டு விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் பீ.ஜே. வின் தக்லீத் கடந்து வந்த பாதை தொடர்பாக இங்கு நாம் சுருக்கமாக பேசுகின்றோம்.

1990 காலப் பகுதி:

1990-2000 காலப் பகுதி
தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களம் பீ.ஜே. யின் கவர்ச்சிகரமான பேச்சால் பாரிய எழுச்சியை நோக்கிப் பயணித்தாலும் அவ்வப்போது அவரது முரண்பான கருத்துக்களும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன என்பதை அறிஞர்கள் சுட்டிக் காட்டியே வந்தனர்.

அவற்றை இனம் காண முடியாத அளவு அவர் மீதுள்ள மோகம் ஏழு வருடம் மார்க்க கல்வி படித்த மௌலவிகளின் கண்களையே மறைத்தது என்றால் சாதாரண பொது மக்கள் பற்றி கேட்கவா வேண்டும்?

பீ. ஜே. கிளறி விட்ட புதுமைகள்:

மனிதனை ஷைத்தான் தீண்டலாமா? ஒரு காலத்தில் முடியும் . பின்னர் முடியாது.

நபித்தோழர்கள் பதவிக்கா தமக்குள் சண்டை இட்டுக் கொள்ள வில்லையா?

உஸ்மான் (ரழி) அவர்கள் அரசியல் ரீதியாக தனது உறவினர்களை முற்படுத்தியதால் அழிவை சந்தித்தார்கள்.

நபித்தோழர்கள் பதவி மோகம் கொண்டவர்கள். அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும் என்ற நிலையில் நபி (ஸல்) அவர்களின் மரணத்தை எதிர்பார்த்திருந்தனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதை நம்ப முடியாது. ( பிந்திய நிலைப்பாடு)

கொடுத்த பொருளுக்கு ஆயுளில் ஒரு தடவைதான் ஸகாத்.

அல்லாஹ் அடிவாரத்திற்கு வருவதில்லை, அவனது அருளே வருகின்றது.

பன்றியின் மாமிசம்தான் குர்ஆன் கூறும் நேரடி வார்த்தை.

ஈஸா நபி (அலை) அவர்கள் குளோனிங் முறையில் பிறந்ததன் காரணமாகவே அவரால் பேச முடிந்தது.

ஆமீன் சப்தமில்லாமலும் கூறலாம்.

ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படாது.
(199 கோவை காதியானிகள் விவாதத்தில்).

ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும். அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தாலும் சரி. (1998- 2000 ற்குப்).

சர்வதேசப் பிறையே சரி, 1999.

உள்நாட்டுப் பிறையே சரி. சர்வதேசப் பிறை பிழை 2000-முதல்)

சூனியம் உண்டு
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. அவர்கள் அதில் இருந்து பாதுகாக்கப்பட்டார்கள். ( 1984- 1998 வரை )

TNTJ சூனியத்தை நம்பாத முஸ்லிம்கள். மற்ற தவ்ஹீத் ஜமாத்துக்கள் சூனியம் இருப்பதாக நம்புவதால் அவர்கள் முஷ்ரிக்கள்.
எனவே அவர்களுக்குப் பின்னால் தொழ முடியாது.

முஸ்லிமைக் காபிர், நரகவாதி எனக் கூற யாருக்கும் உரிமை இல்லை. (2003வரை)

TNTJ தவிர்ந்த ஏனைய அனைத்து பள்ளிகளும் தொழக் கூடாத மஸ்ஜித் ளிரார்களாகும். مسجد الضرار எனவே அங்கு தொழ முடியாது.

மாற்றுக் கருத்துடைய தவ்ஹீத் மேடைகளில் ஏறக் கூடாது.

நபித்தோழர்களின் வழி முறை ஆதாரமாகும். (1992 உமர் அலி விவாதத்தில்)

TNTJ மட்டுமே சுவனத்து ஜமாத். 2018 ஜூலை வரை.

நமது ஜமாத் மட்டுமே குர்ஆன் ஹதீஸை மாத்திரம் பின்பற்றும் தூய ஜமாத்.

மற்ற சகல தவ்ஹீத் ஜமாத்துக்களும் குர்ஆன் ஹதீஸ், ஸஹாபாக்கள் என மூன்று அடிப்படைகளைப் பின்பற்றுவோர் போன்ற பல மார்க்க அதிசயங்களைக் கூறி தனது கொள்கைக்கும் அமைப்புக்கும் ஆள் சேர்த்தார். பீ.ஜே.

பீ.ஜே க்குரிய அறிஞர்கள் மறுப்பு பாமரர்கள் எதிர்ப்பாகியது:

பீ.ஜே. சொல்கின்ற பல மார்க்க விளக்கங்களை முறையாகக் கற்ற அறிஞர்கள் ஆதாரத்துடன் தெளிவாக மறுக்கின்ற போதும் பீ.ஜே சொல்வது பிழையாகுமா? பீ.ஜே தவறாகச் சொல்வாரா? போன்ற வாதங்கள் மூலம் தம்மை சமாதானப்படுத்திக் கொள்ளும் மனோ நிலை மூலமும் பாமர மௌலவிகள், மற்றும் பொது மக்கள் என்போர் இருண்ட கட்டத்தில் இருந்தததன் காரணமாக பீ.ஜே வின் கருத்தக்களை அவர்களால் புறம் தள்ள முடியாத நிலையில் குர்ஆன் ஹதீஸ் அங்கீகாரத்தோடு தக்லீத் வளரத் தொடங்கியது.

அத்துடன், தாயிக்கள் பலர் பீ.ஜே. யின் பயான்களைக் கேட்டு வாந்தி எடுத்தனர்.
பாமர மௌலவிகள் பலர் இந்த தக்லீத் நோய்க்குள் அகப்பட்டுக் கொண்டனர்.

பீ.ஜே மோகம் கொண்ட, அவரது சீடிக்களைக் கேட்கும் அப்பாவி பொது மக்கள் பீ.ஜே யின் கருத்துக்கள் மார்க்கத்திற்கு நேர் முரணானவையாக இருப்பதாகக் கூறப்ளட்டாலும் அவற்றை தெளிவாக மறுக்கும் கற்றறிந்த பிரசித்த பெற்ற ஆலிம் உலமாக்களின் மறுப்புக்கள் சரியானவையாக இருந்துனாலும் அவற்றை அங்கீகரிக்கும் மனோபாவத்தில் இருந்து
சாதாரண மவ்லவிகளே விடுபட மறுத்தோடு
பொதுமக்களையும் ஆலிம் உலமாக்ஙளிடம் இருந்து தூர விலகி இருக்குமாறு பீ.ஜே .என்ற நாமப் போதயோடு போதனை செய்தனர் .

பீ.ஜே. சொல்வது பிழையாகுமா ? எனக் கேட்ட பொதுமக்கள் சில போது சூறத்துல் ஃபாத்திஹாவைக் கூட சரிவர ஓதத் தெரியாதவர்களாக இருந்தனர். இவர்கள் தான் அறிஞர்களை விமர்சனம் செய்தனர்.

இந்த மக்களின் பலவீனங்களை சரியாக அடையாளம் கண்டு கொண்ட பீ.ஜே. தனது அடுத்த கட்ட நகர்வாக பல காரியங்களைச் செய்தார்.

நாமே பரிசுத்தமானவர்கள். மற்றவர்கள் அரபு நாட்டு பணக்கொள்ளையர்கள் என்ற பொய்ப் பிரச்சாரம்.

அவர்கள் சவூதிப் பணத்திற்காக சோரம் போனவர்கள். நாம் சொந்தக் காலில் நிற்பவர்கள்.
மக்கள் பணத்தில் நாம் ஜமாத் நடத்துகின்றோம்.

எம்மைத் தவிர மற்ற தவ்ஹீத் அமைப்புக்கள் அனைத்தும் ஸலஃபுக்களை பின்பற்றுபவர்கள்.

நாம் மாத்திரமே குர்ஆன் சுன்னாவை மட்டும் பின்பற்றும் உத்தமர்கள். எனவே அவர்களின் சுடிக்களைக் கேட்பதோ, பயான்களில் அமராவதோ கூடாது.

அவர்கள் சூனியக் கும்பல், சூனித்தை நம்பும் முஷ்ரிகுகள் போன்ற விஷமப் பிரச்சாரத்தின் மூலம் தன்னை நல்லவனாக்கி, தனது ஜமாத்தை பரிசுத்தப்படுத்திப் பேசி பல மக்களை தன்பக்கம் ஈர்த்து பயணம் செய்த பீ.ஜே என்ற தனிமனதனப் படகு 2018 ல் கவிழ்ந்தது.

தனது பரிசுத்த ஜமாத்தை ஆட்டு மந்தைகளாக்கிய பீ.ஜே:

இதுவரை காலமும் தான் பயணித்த கடல் நன்னீர் கடல் என்ற பீ.ஜே. சென்ற 31/08/2018 நேரடி live நிகழ்ச்சியில் அந்தப் பழம் புளிக்கும் என்று கூறி தனது ஜமாத்தை தாறுமாறாக விமர்சனம் செய்தார்.

பீ.ஜே. யின் உறுதி செய்யப்பட்ட அந்நிய பெண் ஒருவருடனான தகாத உறவு, மற்றும் பாலியல் குற்றம் போன்ற உறுதி மிக்க குற்றங்கள் சுமத்தப்பட்டு அவற்றை அவர் ஒப்புக் கொண்ட நிலையில்
ஜமாத்தின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த நேரத்தில் அவர் மீண்டும் களத்தில் இறங்கி,

தான் சுத்தவாளி,

எனக்கு ஜமாத் அநீதி
இழைத்து விட்டது,

என்னைப் பழிவாங்கி விட்டது,
ஜமாத் தடம் புரண்டு விட்டது,

நிருவாகிகள் ஆட்டு மந்தைகள்,

கோடிக் கணக்கில் கொள்ளையடித்து விட்டனர்…

போன்ற அடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுக்களை தனது வளர்ப்பு பிள்ளைக்கு எதிராக பீ.ஜே. வெளியிட்டதோடு தான் புதிய ஜமாத் ஆரம்பிக்கப் போவதில்லை, ஆனால் மக்கள் இது பற்றி தலைமையைத் தட்டிக் கேட்க வேண்டும் போன்ற சாணக்கிய வார்த்தைகளோடு மறைந்தார் பீ.ஜே.

வடிகட்டிய தக்லீத் வணக்கம் ஆரம்பாகியது:

பீ.ஜே. பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தன்னை பாதூகாத்துக் கொள்ள பல பொய்களை ஜமாஅத் மீது அபாண்டமாகக் கூறி இருப்பதன் காரணமாக TNTJ வினர் “தவ்ஹீத் ஜமாத்” என்ற தமது முக நூலில் பீ.ஜே.யின் அனைத்து குற்றச் சாட்டுகளுக்கும் வரிக்கு வரி பதில் அளித்துள்ள நிலையில் இலங்கை போன்ற நாட்டில் பீ.ஜே. யை இவ்வளவு காலமும் உத்தமராக ஏற்று, பிரச்சாரம் செய்து வந்த SLTJ தம்பிகள் பீ.ஜே. ஒரு பொய்யர், பொய் சொல்கின்றார், TNTJ மாநில நிருவாகத்தின் கீழ் நாம் இயங்குவதா? இல்லையா என்பதை முடிவு செய்ய இருபக்க நியாயங்களையும் நாம் கேட்டு விட்டு முடிவு செய்வோம்? என்று SLTJ அமைப்பினர் அறிவித்த நிலையில் முத்திய பீ.ஜே பக்தர்களில் இருவர் அந்த அமைப்பில் இருந்து திடீரென தற்காலிமாக நின்று கொள்வதாக அறிவித்ததோடு இன்னும் சில பக்தர்களையும் தம்பக்கம் வளைத்துக் கொண்டது பற்றி SLTJ அமைப்பின் செயலாளர் தனது விமர்சனத்தை வெளியிட்டு பீ.ஜே. மீதுள்ள பக்திதான் இதற்கான முழுக் காரணம்,இல்லையானால் இவ்வளவு காலமும் மௌனிகளாக இருந்து கொண்டு பீ.ஜே.பேசிய பின்னால் ஏன் பேச வேண்டும் என்றும் கடுமையகச் சாடியுள்ளார். உண்மையும் அதுதான்.

எல்லை கடந்த அறிஞர்கள், பெரியவர்கள் மோகத்தின் இறுதி நிலை:

ஒரு அறிஞர், அல்லது நல்லமனிதன் பேரில் ஏற்படும் அளவு கடந்த மரியாதை, அர்கள் மீதுள்ள மோகம் அவர்களைப் பற்றி துதிபாடவும், தவறுக்கு அப்பாற்பட்டவர்களாக அவர்களை எண்ணவும், சித்தரிக்கவும் அவருக்காக வாதாடவும், கூட்டம் சேர்க்கவும் மனிதர்களைத் தூண்டுவதை நாம் மறுக்க முடியாது.

ஷீஆக்கள் தமது இமாம்கள் தவறுகள் செய்யாதவர்கள், அவர்களுக்கு தெய்வீகத் தன்மை இருக்கின்றது எனப் பிரச்சாரம் செய்வதற்கு முன்னால் தமது இமாம்கள் பேரில் பல பொய்யான சிறப்புக்களை இட்டுக் கட்டி அவரின் நேசத்தை பாமர மக்கள் மனங்களில் பதிவு செய்வர்.
பின்னர், அவர் பேரில் பல பொய்களைச் சொல்லி பாமர மக்களை வழிகெடுப்பர்.

வழிகேடர்கள் அனைவரும் இவ்வாறான வழிமுறைகளைத்தான் கையாழுவர். பீ.ஜே. என்பவரின் நகர்வும் இப்படித்தான்.

உலகில் ஒரு மனிதன் தெய்வ நிலைக்கு மாற்றப்பட அந்த மனிதன் மீது கொண்ட குருட்டு பக்தியும் ஒன்றாகும்:

வேதம் கொடுக்கப்பட
மக்கள் தமது மதகுருக்கள், மற்றும் அறிஞர்கள் போதிப்பதை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதால் பின்வரும் இறை வசனம் இறங்கியது.

اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَٰهًا وَاحِدًا ۖ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ (التوبة – ٣١ )
﴿٣١ التوبة﴾
அவர்கள் தமது அல்லாஹ்வை விடுத்து
தமது மத குருமார்கள் மற்றும் துறவிகளை மற்றும் ஈஸா மஸீஹ் அவர்களையும் கடவுளர்களாக எடுத்துக் கொண்டனர். தனித்த வணங்கி வழிபடத்தகுதியான ஒரே அல்லாஹ்வை மட்டுமே அன்றி, வேறு யாரையும் வணங்க அவர்கள் கட்டளையிடப்படவுமில்ல. அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்( அத்தவ்பா: 31)

மேற்படி வசனம் அவ்லியா வழிபாடு, கப்ரு வணக்கம் செய்வோர், மற்றும் பீ.ஜே போன்ற வழிகேட்டு சிந்தனைகளை விதைப் போரை தக்லீத் செய்தல், அவர் சொன்னதோடு தாம் கண்டு பிடித்தது போன்று சொல்லும் அவரது பக்தர்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மேற்படி வசனத்தை நபி அதீ பின் ஹாதிம் (ரழி) அவர்கள் முன்னிலையில் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டிய போது,

قال عدي بن حاتم قلت يا رسول الله إنهم لم يكونوا يعبدونهم قال أجل ولكن يحلون لهم ما حرم الله فيستحلونه ويحرمون عليهم ما أحل الله فيحرمونه فتلك عبادتهم لهم . (سنن الترمذي/ سنن البيهقي الكبرى.

அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அந்த மதகுருமார்களை வணங்கவில்லையே எனக் கூறியதும் ,
ஆமாம். இருந்தாலும் அவர்கள் (தமது மனோ இச்சைப்படி) எதை ஹலாலாக்கினார்களோ அதனை அம்மக்கள் ஹலால் என்றும், அவர்கள் எதனைத் தடை செய்தார்களோ அதனை அம்மக்களும் தடுத்தும் வாழ்ந்தார்கள் தானே! எனக் கேட்க. அதீ (ரழி) அவர்கள் உண்மைதான் எனப் பதில் அளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவர்களை வணங்குவது என விளக்கினார்கள்.( நூல்: சுனன் திர்மிதி, அல்பைஹகி)

இதைத்தான் இன்று பீ.ஜே. பக்தர்கள் களத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு காலத்தில் பீ.ஜே. மத்ஹபு, மற்றும் அவ்லியா, தர்கா வழிபாடு செய்த மக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த போது எந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டி பிரச்சாரம் செய்தாரோ அதே ஆதாரங்களை முன் வைத்து பீ.ஜே யின் பக்தர்களை திருத்த வேண்டியதொரு துர்பாக்கிய நிலையில் அவரைப் பின்பற்றும் தாயிக்கள் காணப்படுகின்றனர்.

பீ.ஜே.வின் நிலையோ அதைவிடப் பரிதாபகரமானதாகும்:

ஆரம்பம் காலங்களில் தோன்றிய ஜஹ்மிய்யா, கவாரிஜ், முஃதஸிலா, ஷீஆ போன்ற வழிகெட்ட பிரிவுகளுக்கு எதிராக ஆரம்ப கால ஸலஃப் அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட மறுப்புக்களைக் கொண்டு பீ.ஜே.வின் கருத்துக்கள் மற்றும் போக்குகள் மறுப்புக்கப்படும் பரிதாபகரமான நிலையில் பீ.ஜே .உள்ளார்.

அதனால் தமது புத்திகளை பீ.ஜே. விடம் அடகு வைத்த அவரது ஆதரவாளர்கள் தடுமாற்றம், அறியாமை, வழிகேடு போன்ற குழப்பங்களில் இருந்து மீள முடியாத சூழ்நிலையில்
தாமும் குழம்பி, மக்களையும் குழப்பி வாழ்ந்து வருகின்றனர். இதுதான் இப்போதும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

சமூக சேவை, தொண்டுகள் மூலம் வழிகேடுகளைச் சரி காணலாமா?

பீ.ஜே. தனது வழிகேட்டை மக்கள் முன் கொண்டு செல்வதாக அறிஞர்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுகளை அவரது ஆதரவாளர்கள் மக்களுக்கு தாம் செய்கின்ற சமூக சேவைகளைக் காரணமாக முன்மொழிந்து பீ.ஜே யின் வழிகேடுகளுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்கின்றனர்.

இரத்த தானத்தில் முதலிடம்,

வெள்ள நிவாரணத்தில் முதலிடம்,

அதில் முதலிடம், இதில் முதலிடம் போன்ற சவடால்கள் மூலம் தம்மை நேர்வழி நடப்போராக இவர்கள் சித்தரிக்க முயல்வது “பித்அத்” வாதிகள் தமது அமல்களுக்கு அல்லாஹ் கூலி தருவான் என நம்புவது போன்றதாகும்.

பீ.ஜே.யின் தொண்டு சேவைகளை விட கிறித்தவ மக்கள் பண்மடங்கு பாரிய சேவைச் செய்கின்றனர். அவர்களும் மற்ற மக்கள் மீது அன்பு , பாசம், இரக்கம் கொண்டவர்கள்.

அவர்கள்பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ( سورة الحديد الآية : 27
அவரை (ஈஸாவை) பின்பற்றியவர்களின் இதயங்களில் அன்பு, பாசம் கருணை என்பதை நாம் ஆக்கினோம். இருந்தும் , அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை வேண்டியவர்களாகவே அன்றி அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட துறவறத்தை நாம் அவர்கள் மீது விதியாக்கவுமில்லை. இருந்தாலும்அதையும் அவர்கள் சரிவரப் பேணி நடக்கவில்லை. ( அல்ஹதீத்- 27)

கிரித்தவ மதகுருமார்கள் சமூகத்தில் காணப்பட்ட நற்பண்புகளோடு சேர்த்து அவர்கள் வேத வழிகாட்டல் இன்றி உருவாக்கிக் கொண்ட பித்அத் பற்றியும் எடுத்துரைக்கும் இந்த வசனம் பீ.ஜே. வின் தொண்டுகளையும் ஆதாரமின்றி அவர்
உருவாக்கிய ஜமாத் பைலாவையும் உள்ளெழுந்தவாரியாக மறுப்பதை நாம் உணர முடியும்.

பீ.ஜே.வைப் பின் பற்றினால் சொர்க்கமும்? இமாம்களைப் பின்பற்றினால் நரகமுமா?

இதுதான் இன்றைய கள நிலவரமாகும். பீ.ஜே.விடம் காணப்படும் வழிகேடுகளில் துளியும் இல்லாத நபித்தோழர்களை தவ்ஹீத் அறிஞர்கள் துணைக்கு ஆதாரமாக எடுத்துக் கூறுவது, ஹதீஸ்கலை அறிஞர்கள், ஃபிக்ஹ் துறை சார்ந்த இமாம்கள் போன்ற இந்த உம்மத்தின் அறிவுப் பொக்கிஷங்களை மேற்கோள் காட்டிப் பேசுவது வழிகேடாகப் பார்க்கும் பீ.ஜே. பக்தர்கள்,

உலக முஸ்லிம் அறிஞர்கள் சபை அங்கீகரித்த ஆதாரபூர்வமான பல நூறு ஹதீஸ்களை மறுத்து, இஸ்லாத்தின் பெயரில் சுத்த வழிகேடுகளை
விதைத்த பீ.ஜே. வின் போதனைகளை சுவனத்துப் போதனைகளாக பார்க்கும் நிலை தமிழ் முஸ்லிம் தஃவாக் களத்தில் பிரச்சாரம் செய்வோரிடம் காணப்படுவதாலேயே பீ.ஜே. தனது வழிகேடுகளை இன்னும் இன்னும் விதைத்துக் கொண்டிருக்கின்றார்.

பீ.ஜே. பக்திமான்கள் தமது கிளைகளுக்கு பயான் செய்யப் போகும் போதும் கூட அண்ணன் பேசிய அனைத்து கருத்துக்களையும் ஒரு முறைக்கு பல முறை செவிமடுத்த இன்புற்ற பின்னரே தமது உரைகளை நிகழ்த்தும் வடிகட்டிய பச்சை தக்லீத் கும்பல்களாக இருந்து கொண்டு மற்ற ஜமாத்துக்களை விமர்சனம் செய்வது மக்கா காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களை மதம் மாறியவர் எனப் பிரச்சாரம் செயதது போன்றதாகும்.

பின் வரும் குர்ஆன் வசனத்தைப் படியுங்கள்

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا (66) وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا(67 )
(الأحزاب/ 67) رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا (68)
அவர்களின் (இறை மறுப்பாளர்கள், இணைவைப்பாளர்கள்) போன்றோரின் முகங்கள் நரகில் போட்டுப் புரட்டப்படும் (மறுமை) நாளில் அவர்கள் எமக்கு ஏற்பட்ட கைசேதமே! நாம் அல்லாஹ்வுக்கும் அவனது இந்த தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்திருக்க
வேண்டி இருந்துதே!
எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் எமது பெரியவர்கள்( மௌலவிகள்) தலைவர்களை நாம் வழிப்பட்டு விட்டோம். எமது இரட்ஙனே! அதனால் அவர்கள் எம்மை வழிகெடுத்து விட்டனர். எனவே அவர்களுக்கு இரு மடங்கு வைதனையை அவர்களுக்கு நீ வழங்கி, அவர்களை பெரிய அளவில் சபிப்பாயாக! என்றும் கூறுவார்கள். ( அல்அஹ்ஸாப்- 66-68)

அன்பான பொது மக்களே:

இதுதான் பீ.ஜே. உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத்தின் தற்போதைய கள நிலைவரம்.

அவரது வழிகேடுகள் குர்ஆன், ஹதீஸ் பெயரில் அரங்கேற்றப்பட்டு மார்க்கத்தில் பற்றுள்ள இளைஞர்கள் பலர் வழிகெடுக்கப்படுகின்றனர்
அவர்கள் அறிவியல் பண்பாடு, நாகரீகம் என்ற உயர் விழுமியங்களில் இருந்து முற்றாகத் தூரமாக்கப்பட்டு பிற முஸ்லிம் மக்களின் மானங்களோடு விளையாடும் ரவ்டிகள் போன்று உலாவருகின்றனர்.

பீ.ஜே யின் வழிகேடுகளை நியாயப்படுத்தி நபித்தோழர்கள், இமாம்கள், முஸ்லிம் அறிஞர்கள் எனப் பலரை தாறுமாறாக விமர்சனம் செய்கின்றனர்.
பீ.ஜே. என்பவர் நமது முன்னோர்களின் சிறப்பு, அறிவு, பக்குவம் எதிலும் சேர்க்க முடியாத ஒருவர் என்பதை இவர்கள் மறந்தே செயல்படுகின்றனர்.

இவர்கள் பற்றி நாம் எச்சிரிக்கை செய்தாலோ, மறுப்புக்கள் எழுதினாலோ ஸலஃபிக்கள், மதனிக்கள் மக்களை வழிகெடுப்போர்,சவூதிப் பணத்திற்காக வேண்டியதைப் பேசுவோர் என திசை திருப்பி உங்களை தொடர்ந்தும் வழிகெடுப்பது பற்றி நீங்கள் அவதானமாக இருக்க வில்லையானால் நிச்சயமாக நீங்களும் உங்கள் ஈமானைக் கெடுத்துக் கொள்ள நேரிடும் என்பதை அன்பான எச்சரிக்கை செய்கின்றோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் நமது தூதர் வழியில், நபித்தோழர்களைப் பொருந்திக் கொண்ட வழியில் நாமும் சென்று மார்க்கத்தில் நிலைத்திருக்க அருள் செய்வானாக!

Check Also

பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள்

பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள் அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) தேதி : 26 – 11 – 2020 …

Leave a Reply