Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் (page 2)

தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 17

أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖفَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ﴿١٧﴾  (அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்).  அல்முல்க் – 17   காற்றுடனான கல் மழையை அனுப்புவான். அது உங்களை அழித்துவிடும் என்பதாக மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்: (நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 16

أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ﴿١٦﴾   (வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்). அல்முல்க் – 16    இவ்வசனம் மூலம் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்பதை உணர்த்துகிறான். ஏனெனில் அவனது அடியார்களில் சிலர் அவனை நிராகரித்து, அவனுக்கு இணையும் கற்பிக்கிறார்கள். அம்மக்களை உடனடியாக அழித்துவிட ஆற்றலிருந்தும் அவர்களின் அழிவைப் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 15

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ وَإِلَيْهِ النُّشُورُ﴿١٥﴾ (அவனே பூமியைப் (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே திரட்டப்படுதல் உள்ளது). அல்முல்க் – 15   தொழில் வியாபார நோக்கமாக பூமியில் நீங்கள் நாடிய பகுதிக்கு பயணம் செய்யுங்கள். அல்லாஹ் அப்பூமியை உங்களுக்கு எளிதாக ஆக்காவிடின் உங்கள் முயற்சிகள் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 14

﴿١٤﴾  أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ   (படைத்தவன் அறியமாட்டானா? அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்).  அல்முல்க் – 14    அல்லாஹ் படைப்பினங்களை அறியமாட்டானா? நிச்சயமாக படைத்தவன் எதைப் படைத்தான், எதிலிருந்து படைத்தான், அவர்களின் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்பதை நன்கறிவான். (அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்). பின்பு அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அருளியுள்ள அருட்கொடைகளைக் கூறுகிறான். அவன் பூமியை வசப்படுத்தி ஆடாது,அசையாது அதன் மேல் மலைகளை நிறுவி வாழுமிடமாக …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 13

 وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ  ۖ  إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ﴿١٣﴾  (உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! நிச்சயமாக உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்). அல்முல்க் – 13   உள்ளங்களில் ஊசலாடுபவைகள் மேலும் கண் மூலம் செய்யப்படும் கெடுதிகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். இன்னும் அவன் அறிவில் இரகசியமும், பரகசியமும் சமமானதாகும் என்பதை விளங்கமுடிகிறது. அல்லாஹ் கூறுகிறான்; (உங்களில் இரகசியமாகப் பேசுபவனும், உரத்துப் பேசுபவனும், இரவில் மறைந்திருப்பவனும், …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 12

إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ﴿١٢﴾   (நிச்சயமாக தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு). (அல்முல்க் 67 : 12)    இவ்வசனத்தில் அல்லாஹ் தனிமையில் அவனை அஞ்சி நடப்பவர் பற்றி கூறுகிறான். அவர் மக்களை விட்டும் தனிமையில் இருக்கின்ற பொழுது பாவங்களைத் தவிர்ந்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் காணாதவாறு நன்மைகளைச் செய்வார். நிச்சயமாக அவருக்கு பாவ மன்னிப்பும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 11

  فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِّأَصْحَابِ السَّعِيرِ﴿١١﴾    (தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். நரக வாசிகளுக்குக் கேடுதான்). அல்முல்க் 67: 11     ‘நிச்சயமாக மக்களின் குற்றங்கள்;  நிரூபணமாகும் வரை அவர்களுக்குத் தண்டனை கிடையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                 அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரழி).                               நூல்: அபூதாவூத், அஹ்மத்.   அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்களால் கண்ணுற்ற பின்பு அவைகளை ஏற்று விசுவாசம் கொள்வது …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 10

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ﴿١٠﴾  (நாங்கள் செவிமடுத்திருந்தாலோ விளங்கியிருந்தாலோ நரக வாசிகளில் ஆகியிருக்கமாட்டோம் எனக் கூறுவார்கள்). அல்முல்க் – 10   எங்களுக்குப் பயன்தரும் சிந்தனை ஆற்றல்கள் இருந்திருந்தால் அல்லது அல்லாஹ் உண்மையாக இறக்கியதை செவிமடுத்திருந்தால், நாம் நிராகரித்தவர்களாக இருந்திருக்கமாட்டோம். மேலும் நபிமார்கள் கொண்டு வந்ததை விளங்கும் ஆற்றலும் இருக்கவில்லை. அத்துடன் அவர்களைப் பின்பற்றுவதற்கு எங்களது புத்தி எங்களுக்கு வழிகாட்டவுமில்லை என்று …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 9

 قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّـهُ مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ﴿٩﴾   (அதற்கவர்கள்,  ஆம்! நிச்சயமாக எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம் எனக்கூறுவார்கள்). அல்முல்க் – 9  அல்லாஹ் தனது படைப்புகளுடன் நீதமாக நடப்பதாகக் கூறுகிறான். அவன் தூதர்களை அனுப்பி …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 6 முதல் 8 வரை

وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ ﴿٦﴾ (தனது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் வேதனை உள்ளது. (அது) கெட்ட தங்குமிடம்). அல்முல்க் – 6  அவர்கள் மீலுமிடம் (செல்லுமிடம்),  மிகக் கெட்டதாகும். காரணம், அல்லாஹ்வை நிராகரிப்பது குற்றங்களில் மிகப் பெரியது. إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ ﴿٧﴾  (அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கழுதையின் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 5

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ﴿٥﴾     (முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.) அல்முல்க் 67 : 5                                                             (முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்.) நீந்திச் செல்லக்கூடிய, பாய்ந்து ஓடக்கூடிய நட்சத்திரங்களைக் கொண்டு அல்லாஹ் வானத்தை அலங்கரித்துள்ளான். அல்லாஹ் இவ்வசனத்தில் நட்சத்திரங்களுக்கு ‘மஸாபீஹ்” என்ற வார்த்தையைப் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 4

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ﴿٤﴾   (இரு தடவை உன் பார்வையைச் செலுத்து! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.) அல்முல்க் – 4   (இரு தடவை உன் பார்வையைச் செலுத்து!) மீண்டும் மீண்டும் உன் பார்வையை மீட்டிப்பார்! நீ உறுதி கொள்வதற்காக எத்தனை தடவை உன் பார்வையை மீட்டிப் பார்த்தாலும் அதில் எவ்வித குறைகளையோ, ஏற்றத் தாழ்வுகளையோ, பிளவுகளையோ காணமாட்டாய். …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 3

  الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ مَّا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَـٰنِ مِن تَفَاوُتٍ ۖ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ ﴿٣﴾ (அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா?).அல்முல்க் 67 : 3     (அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான்.)   அல்லாஹ் வானங்களை ஒன்றன் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 2

    الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ﴿٢﴾      (உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும்,  வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன், மன்னிப்பவன்.) அல்முல்க் (67:2)      விளக்கம்: அல்லாஹ்,  மனிதர்களில் யார் நல்லமல் புரிவார்கள் என்பதைப் பரீட்சிப்பதற்காக படைப்பினங்களை இல்லாமையிலிருந்து படைத்தான் என்பதாகும்.   •அல்லாஹ் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான் என்பதற்கு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 1

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) بسم الله الرحمن الرحيم முன்னுரை நிறைவான வாழ்வுக்கு மறையளித்த மாபெரும் இறைவனுக்கே புகழனைத்தும். சாந்தியும், சமாதானமும் சுயநலமே பொது நலம் என மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடந்த மக்களை தீனுல் இஸ்லாம் எனும் ஒளி விளக்கின்பால் வழிகாட்டிய கருணை நிறைந்த நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியை அன்று தொட்டு கியாமநாள் வரை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்கள் மீதும் உண்டாவதாக! உலகில் மனித …

Read More »