Home / Video - தமிழ் பயான் / அகீதத்துத் தஹாவிய்யாஹ் / அகீதத்துத் தஹாவிய்யாஹ்-2

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-2

லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்துக்கு ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறுயாரும் இல்லை’ என்று தமிழில் கருத்துக் கூறலாம். மக்கத்து காபிர்கள் சூரியன், சந்திரன், கல், மனிதர்கள் போன்றவற்றையெல்லாம் கடவுளாக ஏற்றிருந்தனர். உண்மையில் இவைகள் கடவுளல்ல. கடவுள் தன்மைக்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.  அல்லாஹ்வின் படைப்புக்கள் கடவுள்களாக வணங்கப்பட்டாலும் அவை வணங்கத் தகுதியானவைகளல்ல. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்பதையே இக்கலிமா நமக்குணர்த்துகின்றது. எனவே ‘வணங்கப்படுபவன் அல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லலை’ என்று கலிமாவுக்கு  நாம் விளக்கம் சொல்லக் கூடாது ‘வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை’ என்றுதான் அதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டும். இது மொழி பெயர்ப்பு சம்பந்தமான ஒரு சிறு விளக்கம். முஸ்லிம் சமூகம் கலிமதுத் தவ்ஹீதை முழுமையாக ஏற்றிருந்தாலும் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு விதமாக விளக்கம் சொல்வதைப் பார்க்கிறோம்…    மேலும் படிக்க ….Download PDF 

ராக்காஹ் இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஆதரவில் 28:10:2013 அன்று நடைபெற்ற அகீதத்துத் தஹாவிய்யாஹ்-2.
வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

 

Check Also

தவ்ஹீதின் சிறப்பும் அதனால் பாவங்கள் மன்னிக்கப்படுவதும், (அகீதா -2)

4 வது தர்பியா நிகழ்ச்சி அகீதா பாடம்-2, தவ்ஹீதின் சிறப்பும் அதனால் பாவங்கள் மன்னிக்கப்படுவதும், நூல் : கிதாபுத் தவ்ஹீத், …

Leave a Reply