மழை பொழிந்து நின்றபின் ஓதவேண்டிய துஆ
ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.
مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ
وَرَحْمَتِهِ
|
اللَّهِ
|
بِفَضْلِ
|
مُطِرْنَا
|
அவனது அருளாலும்
|
அல்லாஹ்வின்
|
கிருபையாலும்
|
நாங்கள் மழையை அடைந்தோம்
|
Audio mp3 (Download)
தமிழில் :-
முதிர்னா பிஃபல்ளில்லாஹி வரஹ்மதிஹீ
பொருள்:-
அல்லாஹ்வின் அருளாலும்,கிருபையாலும் நாங்கள் மழையை அடைந்தோம்.
அறிவிப்பாளர்:-
ஜைத் இப்னு ஹாலித் (ரலி) அவர்கள், நூல்:- புஹாரி 846,1038,4147
குறிப்பு :-
நபிகளார் ﷺ அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை முடித்த பின் மக்களிடத்தில் உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை அறிவீர்களா? என கேட்டார்கள் மக்கள் அதற்கு அல்லாஹ்வும், அவனது
தூதருமே நன்கு அறிவார்கள் என கூறினார்கள். அப்போது பெருமானார் ﷺ அவர்கள் என் அடியார்களில் என்னை நம்பியவர்களும்,நிராகரித்தவர்களும் உண்டு.அல்லாஹ்வின் அருளாலும்,கிருபையாலும் நாங்கள் மழைபொழிவிக்கப்பட்டோம் என கூறுபவரே என்னை நம்பியவர், மாறாக நாங்கள் இன்னென்ன நட்சத்திரங்களால் மழை பொழிவிக்கப்பட்டோம் என கூறுபவரே என்னை நிராகரித்தவர் ஆவார் என நபிகளார் ﷺ கூறினார்கள். .
மேற்குறிப்பிட்ட ஹதீஸ் போன்று முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத் , நஸயி போன்ற பல நூல்களில் இடம்பெற்றுள்ளது.