Home / Islamic Centers / Riyadh Islamic Center – KSA (page 79)

Riyadh Islamic Center – KSA

அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா?

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர், தலைப்பு : அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா? வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:03:2014,

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 9

 قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّـهُ مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ﴿٩﴾   (அதற்கவர்கள்,  ஆம்! நிச்சயமாக எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம் எனக்கூறுவார்கள்). அல்முல்க் – 9  அல்லாஹ் தனது படைப்புகளுடன் நீதமாக நடப்பதாகக் கூறுகிறான். அவன் தூதர்களை அனுப்பி …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-14)

14வது படிப்பினை குற்றமின்றி தண்டனையில்லை. لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدً  (النمل: 21) நிச்சயமாக அதற்கு நான் கடுமையான தண்டனை வழங்குவேன். சுலைமான் (அலை) அவர்கள் தொழுகைக்காக வுழூ செய்ய நாடிய சமயம்  ஜின்கள்  தண்ணீரை எடுப்பதற்காக அது இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஆற்றல் மிக்க  ஹுத்ஹுதைத் தேடினார்கள், தனது அனுமதியின்றி  அது சமூகமளிக்கத்  தவறியதையறிந்ததும் அதனைத் தண்டிக்க முற்பட்டார்கள்.  ஏனெனில் அது தனது கடமையை நிறைவேற்றத் தவறியமையினால்  முழுப் படையினதும் தொழுகையும் தாமதமாகக் காரணமாகிவிட்டது.  அதனால் அது கடும் தண்டனைக்குள்ளாக நேரிட்டது.  அவ்வாறே மற்றோரை நரகிலிருந்து பாதுகாத்து சுவர்க்கம் நுழைவிக்கும் பணியான  அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, அவனது பாதையில் போர் செய்யாது ஏனைய காரியங்களில் இச்சமுதாயமும் ஈடுபட்டு விடுமேயானால் அதற்கும் அவனது  தண்டனை இறங்கும். அல்லாஹ் கூறுகிறான்: (நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட புறப்படவில்லையானால்  உங்களை நோவினை தரும் வேதனை செய்வான். மேலும் வேறு ஒரு  கூட்டத்தைப் பகரமாகக் கொண்டு  வருவான்.) (அத்தௌபா:39)  இவ்வாறே குற்றம் செய்ததற்குத் தண்டனையாகவும், ஏனையோர் அவ்வாறு  செய்வதைத் தடுக்குமுகமாகவும் குற்றவாளியைத் தண்டிப்பதும்,  அவனுக்கு அல்லாஹ் விதித்த தண்டனையை நிறைவேற்றாமலிருக்க எவருடைய சிபாரிசையும் ஏற்றுக் கொள்ளாமலிருப்பதும் ஆட்சியாளர் அல்லது  அதிகாரியினது கடமையாகும்.  தனக்கும் இத்தண்டனை கிடைக்குமே என்று பயப்படும் பலவீனமான உள்ளங்களைத்  தடுப்பதற்காக தண்டனையைப் பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.  எனவேதான் அல்லாஹ் கூறுகிறான்: ((அவ்விருவருடைய தண்டனையின் போது விசுவாசிகளின் ஒரு கூட்டம்  சமூகமளிக்கட்டும்.)) ((அந்நூர்:02))  தொடரும்……

Read More »

(ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு – மண் அசுத்தத்தை போக்குமா?

தலைப்பு : மண் அசுத்தத்தை போக்குமா? வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:03:2014,

Read More »

(ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு 3 ( இஸ்லாத்தின் பார்வையில் உணவுகள்) பாகம் 2

தலைப்பு : இஸ்லாத்தின் பார்வையில் உணவுகள்(பாகம் 2), வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 19:03:2014,

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 10 முதல் 13 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 17:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-13)

13வது படிப்பினை குற்றத்திற்கேற்ற தண்டனை {مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ } [النمل: 20] என்ன நான் ஹுத்ஹுதைக் காணவில்லை அல்லது அது சமூகமளிக்கவில்லையா? சுலைமான் (அலை) ஹுத்ஹுதைப் பற்றிக் கேட்டு, உடனடியாக அது ஆஜராகாமையால்; அது கூட்டத்தில் தனது பார்வையை விட்டுத் தூரமிருந்து அவருக்கு முன் ஆஜராகுவதில் தாமதம் காட்டியிருக்க வேண்டும். அல்லது அது தனது அனுமதியின்றி சமூகமளிக்காமலே இருந்திருக்க வேண்டும். என்பதனால், அவர்கள் இரு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 6 முதல் 8 வரை

وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ ﴿٦﴾ (தனது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் வேதனை உள்ளது. (அது) கெட்ட தங்குமிடம்). அல்முல்க் – 6  அவர்கள் மீலுமிடம் (செல்லுமிடம்),  மிகக் கெட்டதாகும். காரணம், அல்லாஹ்வை நிராகரிப்பது குற்றங்களில் மிகப் பெரியது. إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ ﴿٧﴾  (அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கழுதையின் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-12)

12வது படிப்பினை ஆட்சியின் பாதுகாப்பிற்கு கண்கானிப்பு இன்றியமையாததாகும். {وَتَفَقَّدَ الطَّيْرَ }النمل: 20 பறவைகளை விசாரித்தார்கள். தனது ஆட்சியில் உள்ளவற்றைக் கண்கானிப்பது, சுலைமான் (அலை) அவர்களது வழமையாக இருந்தது என்பதை மேற்கூறிய வசனத்திலிருந்து புரியலாம். ஏனெனில் படையில் சிறு அங்கமான பறவை இனத்தைப் பற்றிக் கூட கண்கானிக்கும் பொழுது, படையின் ஏனைய அங்கங்களான மனிதர்கள், ஜின்களை; ஆகியவற்றைக் கண்கானிப்பார்கள் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. ஏனெனில் ஆட்சியின் வட்டாரங்கள் விரிவடைந்து அதனை அரசன் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-11)

11வது படிப்பினை நல்லோர்களின் தோழமையை விரும்பி, அவர்களுடன் சேர்த்து வைக்குமாறு வேண்டுதலும். {وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ } النمل: 19 உனது அருள் மூலம் என்னை உனது நல்லடியார்களில் நுழைவிப்பாயாக! இது நபிமார்களும் அல்லாஹ்விடத்தில் கேட்ட பிரார்த்தனையாகும். யூஸூப் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள். ((என்னை முஸ்லிமாக மரணிக்க வைத்து நல்லோருடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக.)) (யூஸூப்:101) ஒவ்வொரு நாளும் ஸுரதுல் பாதிஹாவில் நல்லோர்களின் பாதையின் பக்கம் …

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 7 முதல் 9 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 17:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-10)

10வது படிப்பினை உண்மையான, பூரணமான நன்றி நல்லமல்களின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதேயாகும். {وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ} النمل: 19 நீ பொருந்திக் கொள்ளும் நல்லவற்றை நான் செய்வதற்கும் எனக்கு உதவிபுரியாக 27:19 உண்மையான, பூரணமான நன்றி நல்லமல்களின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதன் மூலமே உண்டாகும், என்பதை சுலைமான் (அலை) உணர்ந்தார்கள். ஏனெனில் நன்றியென்பது மூன்று வகைப்படும். 1.                  மனமார்ந்த நன்றி:உள்ளத்தில் அல்லாஹ்வின் மகத்துவம், நேசம் உண்டாவதும், அனைத்துப் பாக்கியங்களும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 5

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ﴿٥﴾     (முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.) அல்முல்க் 67 : 5                                                             (முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்.) நீந்திச் செல்லக்கூடிய, பாய்ந்து ஓடக்கூடிய நட்சத்திரங்களைக் கொண்டு அல்லாஹ் வானத்தை அலங்கரித்துள்ளான். அல்லாஹ் இவ்வசனத்தில் நட்சத்திரங்களுக்கு ‘மஸாபீஹ்” என்ற வார்த்தையைப் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-9)

9 வது படிப்பினை உபகாரங்களுக்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே. (وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ) (النمل: 19) யா அல்லாஹ்! நீ எனக்குப் புரிந்துள்ள உனது அருளுக்கு நன்றி செலுத்த எனக்கு உதவி புரிவாயாக! என அவர் கூறினார், (27:19) எறும்பு தனது இனத்துடன் செய்த உரையாடலை அல்லாஹ்தஆலா சுலைமான் (அலை) அவர்களுக்குக் கேட்கச் செய்து,விளங்கவைத்த போது அது அல்லாஹ் தன்மீது …

Read More »

(ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு 3 ( இஸ்லாத்தின் பார்வையில் உணவுகள்) பாகம் 1

தலைப்பு : இஸ்லாத்தின் பார்வையில் உணவுகள்(பாகம் 1), வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 05:03:2014,

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 4

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ﴿٤﴾   (இரு தடவை உன் பார்வையைச் செலுத்து! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.) அல்முல்க் – 4   (இரு தடவை உன் பார்வையைச் செலுத்து!) மீண்டும் மீண்டும் உன் பார்வையை மீட்டிப்பார்! நீ உறுதி கொள்வதற்காக எத்தனை தடவை உன் பார்வையை மீட்டிப் பார்த்தாலும் அதில் எவ்வித குறைகளையோ, ஏற்றத் தாழ்வுகளையோ, பிளவுகளையோ காணமாட்டாய். …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-8)

8 வது படிப்பினை நற்காரியங்களை விரும்பி, அதனைப் பகிரங்கப்படுத்தி,  அதற்குப் பரிசு வழங்கி உற்சாகமூட்டல். அந்த எறும்பினது பேச்சு,  தனது கூட்டத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வம் ஆகிவற்றைக் கண்டு வியப்படைந்த சுலைமான் (அலை) அவர்கள், அதனை மதிக்குமுகமாக  தனது பரிவாரத்தை எறும்புப் புற்றை விட்டு ஓதுங்கிச் செல்லுமாறு பணித்தார்கள். இவ்வாறாக அல்லாஹ் அவ் எறும்புக் கூட்டத்தைப் பாதுகாத்தான். இவ்வாறுதான் அல்லாஹ் தனது அடியார்களையும் அவர்கள் உணராமலேயே எத்தனையோ தீங்குகளை விட்டும் …

Read More »

(ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு 2 (சத்தியம் செய்தல் ) பாகம் 2

தலைப்பு : சத்தியம் செய்தல் (பாகம் 2), வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 05:03:2014,

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 3 முதல் 6 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 10:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-7)

  7 வது படிப்பினை தாஇயின் (அழைப்பாளனின்) வார்த்தை அழகானது, ஏனைய வார்த்தைகளை விடவும் சிறந்தது.   அந்த எறும்பினது வார்த்தையினால்  ﴿النمل٢٧:١٩﴾(مِنْ قَوْلِهَا)  (27:19) அல்லாஹ்விற்கு அந்த எறும்பினது வார்த்தைகள் மிகவும் பிரியத்திற்கு உரியவைகளாகிவிட்டதனால்,  அதனை சுலைமான் (அலை) அவர்களுக்கு எட்டச் செய்தான். அதனால் அவர்களும் உவகையுற்று புன்முறுவல் செய்தார்கள். அது மாத்திரமின்றி மறுமை நாள் வரை வரும் நபி (ஸல்) அவர்களது சமுதாயமும் அதனது இந்தச் செயலைப் …

Read More »