Home / அகீதா (ஏனையவைகள்) / சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் தொடர் _02

சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் தொடர் _02

_ஷெய்க் எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

அரபி மொழியில் الله அல்லாஹ் மற்றும்
இலாஹ் إله என்ற சொற்பதங்கள்
உணர்த்தும் உண்மைகள்

முன்னுரை:

இஸ்லாமிய ஷரீஆ பின்வரும் வழிமுறைகள் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

(1) நெகிழாத அடிப்படைகள்.
الأصول / العقائد
அல்-ஈமான் பில்லாஹ், நம்பிக்கையின் முக்கியத்துவம், அல்லாஹ்வையும், அவனது பெயர்கள், பண்புகளை திரிபு படுத்தாது , அவனது படைப்புக்களுக்கு ஒப்பு, உவமை கற்பிக்காது ஈமான் கொள்ளுதல்.
வேதங்கள், வானவர்கள், தூதர்கள் தொடர்பான நம்பிக்கை நடைமுறைகள், மறுமை நாளின் அடையாளங்கள்,
மண்ணறை வாழ்வு, மண்ணறை மகிழ்ச்சி மற்றும் வேதனை,மஹ்ஷர் வெளியில் அல்லாஹ்வை சொர்க்கம், நரகத்தை நேரடியாகக் காணுதல்,நேச்சை, அறுத்துப் பலியிடுதல், திக்ர் மற்றும் பிரார்த்தனைகள், சுஜூத், இறையச்சம், அவ்லியா வழிபாடும் ஈமான் இழப்பும், இணைவைத்தலும் அதன் வகைகளும், குஃப்ரின் வகைகள் மற்றும் பல .

ஆரம்பம் கால அறிஞர்கள் இந்தப் பகுதியை السنة “அஸ்ஸுன்னா” என்ற பெயரில் அழைத்துள்ளனர்.

(02) சட்டங்கள், (அஹ்காம்), நிய்யத், உழு, தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு, திருமணம், தலாக், ஜீவனாம்சம், இத்தா, மரணம், இன்னும் பல.

(03) வணக்க வழிபாடுகள்.
( இபாதாத் – العبادات ) கடமையான மற்றும் நஃபீலான தொழுகைகள், நோன்பு, ஹஜ், நேர்ச்சை, மண்ணறைகளை ஸியாரத் செய்தல், பிராணிளை அறுத்துப் பலியிடுதல்,

(4) அல்முஆமலாத்.المعاملات (வர்த்தகம்/வாணிபம், கொள்முதல் வியாபாரம் , வட்டி, விவசாயம் போன்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பான விபரங்கள்),

(5) அல்முனாகஹாத்
المناكحات /
திருமணம், தலாக், குலஃ, ஃபஸ்க், இத்தா, ஜீவனாம்சம்,
தொடர்பான சமூக விவகாரங்கள்.

(6) அல்அக்லாக். பண்பாடுள், இங்கிதங்கள், பழக்க வழக்கம் . விருந்தோம்பல், அண்டை அயலவர் கடமைகள், பிற மதத்தவருடான உறவு , பெற்றார் பிள்ளை கடமைகள்…

07) அல்ஜினாயாத்.الجنايات (குற்றவியல் சட்டங்கள்) இஸ்லாமிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தல், மதம் மாறுதல், திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறிக் கொள்ளை, ஸகாத் மறுப்பு, பாலியல், வன்புனர்வு, கற்பழிப்பு மற்றும் பல.

அடிப்படைகள் العقائد:

அகீதா துறை சார்ந்த மிகப் பெரும் அறிஞர்கள்
அல்அகீதா/ அல்அகாயித் , அத்தவ்ஹீத், அல்உசூல், அஸ்ஸுன்னா, போன்ற பிரயோகங்களில் அணுகி உள்ளனர்.

அல்லாஹ்:

அவன் அர்ஷின் இரட்சகன்,
மனிதர்களையும் ஏனைய படைப்புக்களையும் படைத்து இரட்சிப்பவனாகிய அந்த
அல்லாஹ்வே உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன், அவனுக்கென அழகிய பெயர்கள், உயர்ந்த பண்புகள் உண்டு.

அவை மனித பண்புகளுக்கு ஈடானதோ, அல்லது படைப்புக்களின் பண்புகளில் ஒன்றுக்கொன்று ஒப்பானதோ கிடையாது.

அல்லாஹ்வை இந்த உலகில் மனிதர்களால் பார்க்க முடியாதவாறு சக்தி மிக்க பிரகாசமானவன். அவனது பிரகாசம் இந்த உலகிலுள்ள மலைகள் போன்ற ராட்சத படைப்புக்கள் கூட தாங்கிக் கொள்ளாது.

அல்லாஹ்வின் பிரகாசம் அவனது படைப்புக்களில் படுமானால் அது படுகின்ற இடங்கள் சுக்குநூறாகி விடும், அல்லது அவை கருகிவிடும். அதனால் அல்லாஹ்வை இவ்வுலகில் எவரும் நேரடியாகக் காண முடியாது.

அல்லாஹ்வைக் கண்டதாக வாதிடுபவன் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவது போன்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யுரைத்தவன்.

இருப்பினும், அவனது உண்மையான, அழகிய தோற்றத்தில் மறுமை நாளில் அடியார்கள் அனைவரும் அவனை நேரடியாகக் காண்பது நிச்சயமான நிகழ்வாகும்.

அது இஸ்லாமிய நம்பிக்கையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதில் இலங்கை மத்ரஸா மௌலவிகள் பலர் இமாம்களான மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத், புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், தாரிமீ, இப்னு ஹுஸைமா மற்றும் பல நல்லறிஞர்களின் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களை அகீதாவில் எடுத்துக் கொள்ளாமல், அகீதாவில் வழிகெட்ட ஜஹ்மிய்யா, அஷ்அரிய்யா, சூஃபிய்யா, ஹுலூலிய்யா, ஷீஆக்கள் போன்ற வழிகெட்ட பின்னோர்களையும் பின்பற்றி அவர்களின் பிழையான விளக்கங்களைச் சரி காண்பதால் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை விஷயத்தில் மிகப் பெரிய தடுமாற்றத்தில் வாழ்கின்றனர் என்பது கசப்பான உண்மை.

சட்டப் பிரச்சினைகளில் முன்னோர் , பின்னோர் என எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கி, பின்பற்றும் நிலை அவர்களிடம் காணப்படுவதால் அவர்களிடம் அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையில் பாரிய இடைவெளியும் வழிகேடும் பிறந்தது என்பதே உண்மை.

எனவே மேற்படி சொற் பிரயோகத்தின் உண்மையான விளக்கம் பற்றி அறிவது நம்மீது கடமையாகும்.

அரபிகளும் அரபிகள் அல்லாதவர்களும் الله அல்லாஹ், மற்றும் இலாஹ் إله போன்ற சொற்பிரயோகங்களை விளங்கி, பிறருக்கு விளக்கியதில் ஏற்பட்ட குழப்பத்தால் முஸ்லிம் உலகில் பாரிய கொள்கைக் குழப்பம் ஏற்பட்டது.

அதன் விளைவாக சிலர் மக்கா காஃபிர்கள் போன்று மண்ணறைகள் கட்டி அவ்லியாக்களை வழிப்பட்டனர்.
மற்றும் சிலர் மனிதன் கடவுளாக, கடவுளின் அவதாரமாக வர முடியும் என்றனர்.
மற்றும் சிலர் எல்லாம் அவனே! அனைத்திலும் அவனே! போன்ற அத்வைத சிந்தனைகள் மூலம் இணைவைத்தனர்.

மற்றும் பலர் மரணித்த மனிதர்களுக்கு தர்காக்கள் கட்டி அவர்களை தரகர்களாக்கி, இவ்வாறான இணை தெய்வங்கள் மூலமாகவே அன்றி அல்லாஹ்வை அடியார்கள் நெருங்க முடியாது என்ற மற்றொரு இணைவைத்தல் நபி ஸல் அவர்களை நேசித்தல் என்ற பெயரில் அரங்கேற்றினர்..
அல்லாஹ்வை அவனுக்குரிய மண்புகளோடு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும், மரணித்த அல்லாஹ்வின் அடியார்களை வணங்குவது பெரும் பாவம் என்றும் போதிப்போரை யூதக் கைக்கூலிகள் என எதிர் பிரச்சாரம் செய்து மக்களை நரகின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு புறத்தில் மனிதர்களிடம் காணப்படும் அல்லாஹ் வின் படைப்புக்களாக உள்ள மனித உறுப்புக்களின் பெயர்கள் மற்றும் செயற்பாடுள் அல்லாஹ்வின் பண்புகளாக, அவனது படைப்புக்களுக்கு ஒப்பிடாது இப்படித்தான் என முறைமையும் கற்பிக்காது நபித்தோழர்கள், மற்றும் இமாம்கள் வழியில் ஒரு முஸ்லிம் அவற்றின் வெளிப்படையான பொருளில் மாத்திரம் நிலைப்படுத்தப்படுத்து
கின்ற போது அவனை அல்லாஹ்வுக்கு சிலை வணக்க வழிபாட்டு உருவம் கற்பித்தவன் போன்று மக்களிடம் காட்டுகின்றவர்கள் தாம் பின் பற்றும் மத்ஹபின் பெயர் ஷாஃபியாம். ஆனால் அகீதாவில் வழிபடுவது அஷ்அரி என்ற ஒரு இமாமையாம்.இது முரண்பாடில்லையா,?

நல்லறிஞராகளான மாலிக், ஷாஃபி போன்ற இமாம்களை இவர்கள் அகீதாவில் ஏன் பின்பற்றுவதில்லை என அவர்களை நோக்கி நாம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இவ்வாறவர்கள் முதலில் அல்லாஹ்வுக்குரிய பண்புகளாக இடம் பெறும் மனித உறுப்புக்களின் பெயர்களை மனிதர்களின்.உறுப்புக்கள் போன்று அல்லாஹ்வுக்கும் உருவமாகக் முதலில் கற்பனை செய்கின்றனர், அதன் பின்னர் அது எப்படி மனிதர்களிடம் இருப்பது அல்லாஹ்வுக்கு இருக்க முடியும்?! என வியந்து தமக்குள் பிரம்மிக்கும் அவர்கள் அப்படியும் இல்லை, இப்படியும் இல்லை என்ற தடுமாற்றமும் அறிவீனமும் நிறைந்த நாஸ்தீக நிலைக்கு வருவதனால் ஷாஃபி மத்ஹபை உழு, தொழுகை, ஸகாத், ஹஜ், போன்ற சாதாரண சட்டங்களுக்காகவும்,

அகீதா மற்றும் அஸ்மாஸிஃபாத் போக்குகளில் பிற்காலத்தில் தோன்றிய வழிகேட்ட சிந்தனைப் பிரிவுகளான ஜஹ்மிய்யா, அஷ்அரிய்யா, மாத்ரீ(ரூ)திய்யா, முஃதஸிலா, ஷீஆ போன்ற பிரிவுகளின் போக்காகக் கொள்ளப்படும் (நஸ்) சான்றுகள் பாழடிப்பு, தவறான விளக்கமளித்தல், நிராகரிப்பு , தரிபுகள் போன்ற வழிகேட்டில் ஊறித்திழைத்தவர்களை ஒரு புறத்திலும், மறு புறத்தில் இப்னு அரபி, அபூயஸீத் அல்-பிஸ்தாமி, ஜுனைத் அல்-பக்தாதி போன்ற வழிகெட்ட அத்வைத சூஃபிகளின் கோட்பாட்டிலும் தொங்கிக் கொண்டு மக்கா காஃபிர்கள் போன்று வாழும் இவர்கள் பிழையான தமது சித்தாந்தமே சரி என்ற நிலைப்பாட்டிலும் ஷைதானைப் போன்று ஏறுக்குமாறான விளக்கம் தந்து, பாரிய வழி கேட்டில் உழன்று கொண்டு தமது விளக்கமே சரி என்று வாதிடுகின்ற பலரை இந்நாட்டில் நம்மால் காண முடிகின்றது.

அரபியில் إله தரும் பொருள்:

  • “இலாஹ் ” என்ற அரபு வார்த்தை أله “அலிஹ” என்ற இறந்த காலச் சொல்லின் செயற்படு பொருள், அல்லது பெயர் வினைச் சொல்லில் இருந்து பிறந்த ஒரு பொதுப் பெயர்ச் சொல்லாகும்.

பணிந்து நடத்தல் , மகத்துமாகவும் கண்ணியமாகவும் இரட்சகனாக எடுத்துக் கொள்ளுதல் போன்ற கருத்துக்கள் தருகின்றனர் அரபு அகராதி அறிஞர்கள்.

  • இலாஹ் إله என்ற சொல்லின் பண்மைச் சொல்லாக آلهة என்று கூறப்படும்.இதற்கு அன்பு, மரியாதை தந்து வணங்கப்படும் கடவுள், இரட்சகன் என்று சில போதும்,
  • வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ் என்றும் இதற்கு பொருள் கொள்ளப்பட்டாலும் ஒரு முஸ்லிம் உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியான அல்லாஹ் என்று புரிவதையே அல்லாஹ் தனது திருமறையிலும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது நம்பிக்கை, போதனை , நடத்தை அனைத்திலும் விளக்கி இருக்கிறார்கள் .

இது தொடர்பாக அரபிக் கவிஞர்கள் தமது கவிதைகளிலும் , மக்கள் தமது பேச்சிலும் உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ் என்பதைக் குறிக்க உபயோகித்திருப்பதை அறிய முடிகின்றது .

நபித்தோழர் குபைப் (ரழி) அவர்கள் காபிர்களால் சித்திரவதை செய்யப்பட்ட தனது இறுதி நேரத்தில் இலாஹ் என்ற வார்த்தையை அல்லாஹ் என்பதைக் குறிக்கப் பாவித்திருப்பதன் மூலம் இதனை உறுதி செய்து கொள்ள முடியும்.

وَلَسْتُ أُبَالِى حِينَ أُقْتَلُ مُسْلِمـــاً عَلَى أَيِّ جَنْبٍ كَانَ في اللهِ مَصْرَعِي
முஸ்லிம் என்ற நிலையில் நான் கொல்லப்படுவது பற்றி எதையும் பொருட்படுத்தவதில்லை.

அல்லாஹ் என்ற அந்த உண்மையான உள்ளமை விஷயத்தில் எனது கொலை எப்படியாக நடந்தேறினாலும் சரியே!

وَذَلِكَ في ذاتِ الإِلَهِ وَإِن يَشـــأ يُبارِك عَلى أَوصالِ شِلوٍ مُــمَزَّعِ

இது அல்லாஹ்வுக்காக த்தான் ( நடக்கின்றது). அவன் நாடினால் சிதைக்கப்பட்ட உறுப்புக்களில் விருத்தி செய்வான் ; என்ற கவிதையில் இலாஹ் إله என்ற சொல் அல்லாஹ் என்பதைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

இலாஹ் إله என்ற சொல் தரும் பொருள்:

(1) இலாஹ் إله என்ற
சொல் மொழி மற்றும் பொதுப் பொருள் வழக்கில் பின்வரும் பொருளில் இடம் பெற்றுள்ளது.

أن معناه (الذي يستحق أن يكون معبودا) وليس فقط (المعبود)
فقد قال ابن منظور في لسان العرب (ج 13 / ص 467):

வணங்கப்பட என்று மட்டும் இல்லாமல் வணங்கப்படத் தகுதியானவனாக இருப்பதையும் குறிக்கும்;
என இமாம் இப்னு மன்ழூர் என்பவரை மேற்கோள் காட்டி விளக்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி கருத்தை சிதைக்கும் வகையில் செயல்பட்ட நபி நூஹ் (அலை) அவர்களின் சமுதாயம் முதல் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த தூதர்களின் சமூகம் வரை இந்த சொல்லின் கருத்தைச் சிதைத்தனர்.

நபிமார்கள் அதற்கெதிரான எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த போது அவர்கள் சுமந்த கஷ்டங்கள், பட்ட இடர்கள், துன்பங்கள் அனைத்தும் இலாஹ் என்பது வணங்கி வழிபடத் தகுதியான ஒருவனையே குறிப்பதை உண்மைப்படுத்துகின்றன.

அத்துடன்:

  • வத்து, சுவா, யகூஸ், யவூக், நஸ்ர் போன்ற இறைநேசர்களை வழிபட வேண்டாம் என நபி நூஹ் (அலை) அவர்கள் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததும்,
  • இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் சிலைகளை உடைத்து நொறுக்கியமைக்காக அவற்றை வணங்கியோரால் தீக் குண்டத்தில் வீசப்பட்டதும்,
  • இல்யாஸ் (அலை) அவர்கள் காளையை வணங்கியோரை எதிர்த்ததும்,
  • மூஸா நபி (அலை) அவர்கள் காளைக் கன்றை எரித்து கடலில் தூவியதும்,
  • மக்கா காஃபிர்கள் பூமியில் பல தெய்வங்களை வணங்கிய போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

لا اله الا الله
என்ற உயர் கலிமாவின்
மூலம் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தத போது அவர்களின் பல இன்னல்களுக்கு ஆளாகியதும் , மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا (الإسراء/ ٨١)

  • சத்தியம் வந்தது.
  • அசத்தியம் அழிந்தது.
  • அசத்தியம் அழிந்து போகக் கூடியதே என்ற குர்ஆன் வசனத்தை ஓதியவர்களாக கஃபாவில் காணப்பட்ட 360 சிலைகளையும் உடைத்து நொறுக்கி வீசியதும் அல்லாஹ் என்றும் தனித்து வணங்கப்படத் தகுதியானவன் என்ற கருத்தை வலப்படுத்தி, அதுதான் உண்மையும் என சுட்டிக்காட்டி உணர்த்துவதை அறியலாம்.

மேற்படி கருத்தை உறுதிப்படுத்தும் வகையில்
இடம் பெறும் பின்வரும் குர்ஆன் வசனங்களில் இலாஹ் தொடர்பான கருத்தைக் கவனிக்கவும்.

وَهُوَ الَّذِي فِي السَّمَاءِ إِلَٰهٌ وَفِي الْأَرْضِ إِلَٰهٌ ۚ وَهُوَ الْحَكِيمُ الْعَلِيمُ (الزخرف : ٨٤)
வானத்தில் உண்மையாக வணங்கப்படுபவனும் அவனே! பூமியில் (உண்மையாக வணங்கப்படுபவனும் அவனே! அவன் ஞானம் நிறைந்தவன், யாவற்றையும் நன்கு அறிந்தவன். (அஸ்ஸுக்ருஃப்-84) .

பல தெய்வங்களை எடுத்துக் கொண்டவர்களே நீங்கள் எடுத்துக் கொண்ட தெய்வங்கள் பொய்யானனவைகள். எனவே வணங்கத் தகுதி உள்ள அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுங்கள் என்பது இதன் பொருளாகும்.

مااتَّخَذَ اللَّهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَٰهٍ ۚ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ (91) عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ (المؤمنون ٩١-٩٢)

(அவர்கள் கற்பனை செய்வது போன்று) அல்லாஹ் தனக்கென ஒரு குழந்தையை எடுத்துக் கொள்ள வில்லை. அவனுடன் (உலகைப் படைக்க , நிர்வகிக்க) இன்னொரு கடவுளும் இருந்ததில்லை. அப்படியாயின் (அந்த) ஒவ்வொரு தெய்வமும் அது படைத்ததோடு சென்றிருக்கும். (பலமிக்க ) ஒரு தெய்வம் (பலமற்ற) மற்றொரு தெய்வத்தின் மீது அத்துமீறி அதிகாரமும் செலுத்தி இருக்கும். அவர்கள் (உண்மைக்குப் புறம்பாக) வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். மறைவானதையும், முன்னால் இருப்பதையும் அறிந்தவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவனாகி விட்டான்.(அல்முஃமினூன்- 91-92)

இன்ஷா அல்லாஹ் தொடரும்….

Check Also

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 |

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 | அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸி ஜித்தா …

Leave a Reply