Home / Tafseer / குர்ஆன் தப்ஸீர் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 29

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 29

قُلْ هُوَ الرَّحْمَـٰنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ ﴿٢٩
(அவனே அளவற்ற அருளாளன். அவனை நம்பினோம். அவனைச் சார்ந்திருந்தோம். தெளிவான வழி கேட்டில் உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்” எனக் கூறுவீராக!). அல்முல்க் – 29
(அவனே அகிலத்தாருக்கெல்லாம் அரசனாக இருக்கிறான். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். மேலும் எமது அனைத்துக் காரியங்களிலும் அவன் மீதே நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்:
(வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அவனிடமே அனைத்துக் காரியமும் திருப்பப்படும். எனவே அவனையே வணங்குவீராக! அவனையே சார்ந்திருப்பீராக!). ஹூத் – 123.
(தெளிவான வழிக்கேட்டில் உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்”).
இவ்வுலகிலும், மறுவுலகிலும் இறுதி முடிவு உங்களுக்கா? அல்லது எங்களுக்கா? என்பதை அறிந்து கொள்வீர்கள்.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply