Home / Q&A / பஜ்ர் அதானில் “அஸ்ஸலாத்து ஹைரு மினன் நவ்ம்”என்று கூடுதலாக சொல்கிறார்களே?அதற்கு ஆதாரம் உள்ளதா?

பஜ்ர் அதானில் “அஸ்ஸலாத்து ஹைரு மினன் நவ்ம்”என்று கூடுதலாக சொல்கிறார்களே?அதற்கு ஆதாரம் உள்ளதா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,

கேள்வி : பஜ்ர் அதானில் “அஸ்ஸலாத்து ஹைரு மினன் நவ்ம்”என்று கூடுதலாக சொல்கிறார்களே?அதற்கு ஆதாரம் உள்ளதா?
பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC,

அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்.

கேள்விக்கான பதில் :

தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஃபஜர் பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது.
இந்த நடைமுறைக்கு சரியான நபிமொழிகளில் ஆதாரம் இல்லை என்று தற்காலத்தில் சிலர் கூறிவருகின்றனர். இது தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் இவர்கள் கூறுவது உண்மையல்ல. ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று சொல்வது தொடர்பாக வரும் செய்திகளில் சிலவை பலவீனமாக இருந்தாலும் பலவீனமில்லாத சரியான செய்தியும் ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாக உள்ளது.
صحيح ابن خزيمة – كتاب الصلاة
باب التثويب في أذان الصبح – حديث : ‏378‏
نا محمد بن عثمان العجلي ، نا أبو أسامة ، عن ابن عوف ، عن محمد بن سيرين ، عن أنس قال : ” من السنة إذا قال المؤذن في أذان الفجر : حي على الفلاح قال : الصلاة خير من النوم ”
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூறுவது நபிவழியாகும்.
நூல் : சஹீஹு இப்னி குஸைமா (378)
இந்த அறிவிப்பில் அனஸ் (ரலி முஹம்மது பின் சீரீன் இப்னு அவ்ஃப் அபூ உசாமா முஹம்மது பின் உஸ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
இதே செய்தி சுனனுத் தாரகுத்னீ என்ற நூலிலும் ஆதாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
سنن الدارقطني – كتاب الصلاة
باب ذكر الإقامة واختلاف الروايات فيها – حديث : ‏810‏
حدثنا الحسين بن إسماعيل , ثنا محمد بن عثمان بن كرامة , ثنا أبو أسامة , ثنا ابن عون , عن محمد , عن أنس , قال : ” من السنة إذا قال المؤذن في أذان الفجر : حي على الفلاح , قال : الصلاة خير من النوم الصلاة خير من النوم مرتين , الله أكبر الله أكبر لا إله إلا الله ” *

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூறுவது நபிவழியாகும்.
நூல் : தாரகுத்னீ (810)

எனவே ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறுவது நபிகளார் கற்றுக்கொடுத்த முறையாகும். இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

Check Also

மார்க்க சட்டங்கள் சுமையானதா சுவையானதா?

அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் சிறப்பு குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி …

Leave a Reply