தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 77
❤ வசனம் : 41
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّيْرُ صٰٓفّٰتٍؕ
كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ
நீர் பார்க்கவில்லையா ↔ اَلَمْ تَرَ
அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதை ↔ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ
எவர் வானங்களிலிருக்கிறாரோ மேலும் பூமியில் ↔ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ
வரிசையாக செல்லக்கூடிய பறப்பவைகள் ↔ وَالطَّيْرُ صٰٓفّٰتٍؕ
அனைத்தும் நிச்சயமாக அறிந்திருக்கின்றன ↔ كُلٌّ قَدْ عَلِمَ
அவற்றின் தொழுகையையும் தஸ்பீஹயும் ↔ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗؕ
وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ ↔
அவர்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் மிக அறியக்கூடியவனாக இருக்கிறான்.
மலக்குகளின் தஸ்பீஹ்
❤ சூரா அல் அன்பியா 21 : 20
يُسَبِّحُوْنَ الَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُوْنَ
இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
❤ சூரா ஹாமீம் ஸஜ்தா 41 : 38
فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُوْنَ لَهٗ بِالَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْــٴَــمُوْنَ۩
ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
❤ சூரா அல் அன்பியா 21 : 79
இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன – இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
மேலும் 13:13, 59:1
💠 அல்லாஹ்வுடைய படைப்புகள் அனைத்தும் தஸ்பீஹ் செய்கின்றன ஆனால் அதை எப்படி என்று நாம் அறிந்து கொள்ள முடியாது.
❤ சூரா பனீ இஸ்ராயீல் 17 : 44
ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட