ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 13

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 13

மேற்கூறப்பட்ட எந்த காரணிகளும் இல்லாமல் அறிவிப்பாளருக்கு தெரியாமலே موضوع இடம்பெற்றிருக்கும்.

உதாரணம்:-

இமாம் லைத் இப்னு சஅத் அவர்கள் இமாம் மாலிக் மதீனாவில் சிறந்து விளங்கிய போது  அவர் எகிப்தில் மிகப்பெரும் இமாமாக இருந்தார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் என்றொரு எழுத்தாளர் இருந்தார்கள். அப்துல்லாஹ் அவர்களது அண்டை வீட்டார் ஒருவர் அப்துல்லாஹ் அவர்களைப் போலவே எழுதி அவர் வீட்டில் தூக்கிப்போடுவார்.அப்துல்லாஹ் அவர்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேர்த்து வைத்து விடுவார்கள். இவ்வாறாக லைத் இப்னு சஅத் அவர்களுக்குதெரியாமலேயே அவர் சொன்னதாக பல செய்திகள் அவரது தொகுப்பிற்குள் இடம்பெற்று விட்டன.

ஒரு அறிஞர் பிரபலமாவதற்கு முக்கிய காரணம் பிரபலமான மாணவர்கள் இருப்பது தான்.

அக்காலத்தின் எழுத்து முறைகள்

உதாரணம்:-

🍃 ஒருவர் மதீனாவில் சில ஹதீஸ் கிடைக்கப்பெற்றால் அதை பக்தாதிற்கு கொண்டு சென்று அதை பத்து பேர் குறிப்பு எடுப்பார்கள். அங்கிருந்து ஷாம் தேசத்திற்கு செல்லும் . இவ்வாறாக அது பரவும்.

🍃 இன்றளவிலும் எழுத்துப்பிரதிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் இருக்கின்றனர்.

🍃 மேற்கூறப்பட்ட எந்த செய்திகளிலும் இமாம்கள் தங்களுடைய தனிப்பட்ட அறிவை முற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply