Home / Uncategorized / முஸாபகதுர் றமழான்

முஸாபகதுர் றமழான்

தினமும் நடைபெறும் இப்தார் சிந்தனை சிறப்பு உரைகளில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து மாத இறுதியில் கொடுக்கப்படும் வாட்ஸ்அப் இலக்கம் அல்லது மெயிலுக்கு உங்கள் விடைகளை அனுப்பி வைத்து வெல்லுங்கள் பயன் பெறுங்கள்.

தொடர்புக்கு Whatsapp No.

+966 53 182 6557

ரமழான் 1 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. அறபு மொழியில் ‘ஆகிபா’ என்பதன் பொருள் யாது?
  2.   அல்குர்ஆனில் ‘ஆகிபா’ என்று எப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
  3.   உரை முழுக்கக் கூறப்பட்ட நபிமார்களின் பெயர்கள் யாது?

ரமழான் 2 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்வி

  1. உரையில் கூறப்பட்ட ஓர் இமாமின் பெயர் யாது?

ரமழான் 3 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. இருவர் மாத்திரம் ஜமாஅத்தாக தொழும்போது மஃமூம் எவ்வாறு நிற்க வேண்டும்? அதற்குரிய ஆதாரம் யாது?
  2. நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி அண்ணை ஆயிஷா (றழி) அவர்கள் எவ்வாறு வர்ணித்தார்கள்? *

ரமழான் 4 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. உரையின் தொனிப்பொருளாக கூறப்பட்ட வசனம் அல்குர்ஆனில் எத்தனையாவது அத்தியாயமாக, வசனமாக இடம்பெற்றுள்ளது?
  2. இறையச்சமும், பொறுமையும் சேர்த்து கூறப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் இரண்டைக் குறிப்பிடுக. (அத்தியாயப் பெயர், வசன எண் மட்டும் போதுமானது)

ரமழான் 5 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. பொறுமையின் வகைகளைக் குறிப்பிடுக?
  2. நல்லரங்கள் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கூலி யாது?

ரமழான் 6 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. அல்-இஸ்திகாமா என்பதன் சரியான பொருள் யாது?
  2. உரை முழுக்க இஸ்திகாமா தொடர்பாகக் கூறப்பட்ட அல்குர்ஆன் வசனஙகள் எத்தனை? சிறப்பு தொடர்பாகக் கூறப்பட்ட வசனம் யாது? (அத்தியாப் பெயர், வசன எண் போதுமானது)

ரமழான் 7 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. ‘ஒருவர் இன்னுமொருவரின் சுமையை சுமக்கமாட்டார்’ எனும் கருத்துள்ள வசனங்கள் அல்குர்ஆனிpல் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?
  2. அல்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் ‘இரு நல்லடியார்கள்) என்பவர்கள் யார்?

ரமழான் 8க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. அல்லாஹ், அல்குர்ஆனில் கேள்விகேட்கின்றனர் எனக்கூறி விடையளித்து இடம்பெற்றிருக்கும் வசனங்கள் எத்தனை?
  2. நாம் செய்யும் பிரார்த்தனைகள் ஏதோ ஒரு விதத்தில் அங்கீகரிக்கப்படுகிறது. அவ்விதங்கள் யாது? (சுருக்கமாக)

ரமழான் 9 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. பாவத்திற்கு துணை போகக்கூடாது என்பதற்கு ஓர் ஆதாரம் தருக?

ரமழான் 10 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. உரையின் தொனிப்பொருளான வசனத்திற்கு நிகரான பொருளைக் கொண்டு கூறப்பட்ட வசனம் யாது?
  2. இவ்வுலக இன்பங்களை மறக்கடிக்கக்கூடிய அம்சங்களைக் கூறுக.

ரமழான் 11 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. இன்றைய உரையின் தொனிப்பொருளான அல்குர் ஆன் வசனத்தில் உள்ளடங்கியிருக்கும் நான்கு உபதேசங்களை சுருக்கமாகத் தருக.
  2. பொருளாதாரம் தொடர்பாக மறுமையில் கேட்கப்படும் இரண்டு கேள்விகளைக் குறிப்பிடுக.

ரமழான் 12 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. இமாம் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் கூறும் மனோ இச்சையைப் பின்பற்றியவர்கள் யார்?

ரமழான் 13 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. உரையில் ‘துறுப்பிடித்தல்’ என்பதற்கு பாவிக்கப்பட்ட வார்த்தை யாது?

ரமழான் 14 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது இவ்வுலக வருட எண்ணிக்கையில் எத்தனைக்கு சமம்? ஆதாரம் தருக.
  2. முஃமின்களுக்கு சுவனம் தருவதாக அவர்களிடமிருந்து அல்லாஹ் வாங்கிக்கொண்டவை எவை?

ரமழான் 15 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. தொழும்போது சோர்வு ஏற்பட்டால் பிடித்துக்கொள்வதற்காக இரண்டு தூண்களுக்கிடையில் கயிற்றை தொங்கவிட்டிருந்த ஸஹாபிப் பெண்மனி யார்?
  2. மூலவியாதியால் பீடிக்கப்பட்டிருந்த நபித்தோழரை அமர்ந்து தொழும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தோழரின் யெர் யாது?

ரமழான் 16 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. சோதனைகளின் போது ஒரு விசுவாசியிடம் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் எவை?
  2. குர்ஆன் கூறும் ஓரு முஃமினின் பண்புகள் இரண்டைக் கூறுக.

ரமழான் 17 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. உள்ளம் தூய்மையாகுவதற்கு அவசியமானவைகளைக் குறிப்பிடுக.

ரமழான் 18 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. துஆக்கள் எத்தனை வகைப்படும்? அவைகள் எவை?
  2. அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அருளிய அருள்களில், அஷ்ஷரஹ் அத்தியாயத்தில் எத்தனை அருள்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது?

ரமழான் 19 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. லைலதுல் கத்ர் வருடந்தோறும் ஒரே நாளில் வருமா என்பதற்கு அறிஞர்களின் கருத்துயாது?
  2. உரையில், சுவனத்தின் புதையல் எனக் கூறப்பட்ட திக்ர் யாது?

ரமழான் 20 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்

  1. (கைருஸ் ஸாத்) தயார் செய்யப்படுபவைகளில் சிறந்தது எது?
  2. இறையச்சமுடையவர் (அத்கா) தூரமாகிவிடுவார் என்பதில் ‘அத்கா’ என்பவர் யார்?

Check Also

சுன்னாவின் அந்தஸ்து

வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி சுன்னாவின் அந்தஸ்து, உரை : மௌலவி முஹம்மது உவைஸ் மதனி நாள் : 21-12-2018 வியாழக்கிழமை …