Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 34

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 34

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 34

தெளிவான விஷயங்களில் விளக்கம் கூறலாம்.

ஸூரத்துல் ஜாஸியா 45:34

وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰٮكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏

அன்றி, (அவர்களை நோக்கி) “இந்நாளை நீங்கள் சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை” என்றும் கூறப்படும்…

ஸூரத்து மர்யம் 19:64

وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا‌ ۚ‏

உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்

ஆகவே இந்த வசனத்திற்கு இறைவன் மறந்து விடுவான் என்று அர்த்தமல்ல, மறுமையில் அவன் இத்தகையவர்களை கண்டு கொள்ள மாட்டான்  என்பதே பொருளாகும் ,என்று குர்ஆன் ஹதீஸின் ஆதாரங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்

يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ

فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ

بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ

لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ

ஒரு ஹதீஸில் நபி (ஸல் )இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் உபதேசம் செய்யும்போது நீங்கள் உதவி தேடினால் அல்லாஹ்விடம் தேடுங்கள் என்று கூறும்போது அந்த ஹதீஸில் அல்லாஹ்வை உங்கள் முன்னால் காண்பீர்கள் என்று ஒரு வார்த்தை இடம்பெறும்.

ஸூரத்துல் அஃராஃப் 7:143

لَنْ تَرٰٮنِىْ…

மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது…

إنكم سترون ربكم عز وجل كما ترون القمر

நபி (ஸல்) – மறுமையில் நீங்கள் பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பது போல் உங்கள் இறைவனை  காண்பீர்கள்.

وعَنْ أَبِي ذَرٍّ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ رَأَيْتَ رَبَّكَ قَالَ نُورٌ

أَنَّى أراه رواه مسلم

அபூதர் (ரலி) நபி (ஸல்)ளிடம் நீங்கள் இறைவனைப் பார்த்தீர்களா”?, என்று கேட்டபோது அவன் ஒளியாயிற்றே! எப்படிப் பார்ப்பேன் என்று நபி( ஸல் )கூறினார்கள் (முஸ்லீம்)

ஆகவே تَجِدْهُ تُجَاهَكَ என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டிய முறைப்படி புரிந்து கொள்ள வேண்டும்.

ஸூரத்துல் முல்க் 67:1

تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ

அவனது கையில் ஆட்சி இருக்கிறது …

ஆகவே அது கையல்ல, அது பலம் என்றெல்லாம் மாற்று விளக்கம் கூறுதல் கூடாது .

تكييف – அல்லாஹ்  உடைய பெயர்கள் பண்புகளை முறைமைப்படுத்துதல் (தன்னுடைய அறிவுக்கேற்றார் போல் புரிந்து கொள்ள)கூடாது.

அல்லாஹ்விற்கு உதாரணம் சொல்லக்  கூடாது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply