Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (34 to 46)

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (34 to 46)

﴿٣٤ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ
(34)  எனவே (மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
فَإِذَا جَاءَتِ
الطَّامَّةُ
الْكُبْرَىٰ
எனவே வந்துவிட்டால்
அமளி
மிகப்பெரியது
﴿٣٥ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ  
(35)  அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றை யெல்லாம் நினைவுபடுத்திக்கொள்வான்.    
يَوْمَ
يَتَذَكَّرُ
الْإِنسَانُ
مَا سَعَىٰ 
அந்நாளில்
நினைத்துப்பார்ப்பான்
மனிதன்
தான் முயற்சி செய்தவற்றை
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ﴿٣٦
 
(36)  அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
وَبُرِّزَتِ
الْجَحِيمُ
لِمَن يَرَىٰ
வெளிப்படுத்தப்படும்
நரகம்
பார்ப்பாரே அவருக்கு
فَأَمَّا مَن طَغَىٰ﴿٣٨
(37)  எனவே, எவன் வரம்பை மீறினானோ 
فَأَمَّا
مَن طَغَىٰ
எனவே
எவன் வரம்பை மீறினானே அவன்
وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا﴿٣٧
(38)  இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத் தானோ- 
وَآثَرَ
الْحَيَاةَ
الدُّنْيَا
தேர்ந்தெடுத்தான்
வாழ்க்கை
உலகம்
 الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ﴿٣٩ فَإِنَّ
(39) அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும். 
فَإِنَّ الْجَحِيمَ
هِيَ
الْمَأْوَىٰ 
நிச்சயமாக நரகம்
அது
தங்குமிடம்
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ﴿٤٠
(40)எனவே எவன் இறைவனிடம் நிற்பதை அஞ்சி, தன் மன இச்சையை விட்டும் விலக்கிக் கொண்டானோ அவன்,
وَأَمَّا
مَنْ خَافَ
مَقَامَ
رَبِّهِ
وَنَهَى
எனவே
பயந்தானே அவன்
இடம்
தன்இறைவன்
விலக்கினான்
النَّفْسَ
عَنِ الْهَوَىٰ
தன்னை
மன இச்சையை விட்டும்
فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ﴿٤١
(41)  நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். 
فَإِنَّ الْجَنَّةَ
هِيَ الْمَأْوَىٰ
நிச்சயம் சுவர்க்கம்
அது தங்குமிடம்
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا﴿٤٢ 
(42)  (நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றிஅது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள். 
يَسْأَلُونَكَ
عَنِ السَّاعَةِ
أَيَّانَ
مُرْسَاهَا
உம்மைக் கேட்கிறார்கள்
நேரத்தைப் பற்றி
எப்போது
அது ஏற்படும்
فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا﴿٤٣ 
(43) அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
فِيمَ
أَنتَ
مِن ذِكْرَاهَا
எதில்
நீர்
அதைக் கூறுவதற்கு
إِلىٰ رَبِّكَ مُنتَهَاهَا﴿٤٤ 
(44) அதன் முடிவு உம்முடைய இறைவனிடம் இருக்கிறது. 
إِلىٰ رَبِّكَ
مُنتَهَاهَا 
உம் பக்கம் இறைவன்
அதன் முடிவு
إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا﴿٤٥ 
(45) நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர்தாம், 
إِنَّمَا أَنتَ
مُنذِرُ
مَن يَخْشَاهَا
நிச்சயமாக நீர்
எச்சரிக்கை செய்பவர்
அதை பயப்படுவாரேஅவருக்கு
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا﴿٤٦
(46) நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும். 
كَأَنَّهُمْ
يَوْمَ
يَرَوْنَهَا
நிச்சயமாக அவர்கள்
நாளில்
அவர்கள் காண்பார்கள் அதை
لَمْ يَلْبَثُوا
إِلَّا
عَشِيَّةً
أَوْ
ضُحَاهَا
அவர்கள் தங்கவில்லை
தவிர
மாலை
அல்லது
காலை

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply