உசூலுல் ஹதீஸ்
பாகம்-17
ஹதீஸ்கள் விஷயத்தில் உஸ்மான் (ரலி) வின் நிலைப்பாடு
🔷 புரையா பின்த் மாலிக் (ரலி) அவர்களது கணவன் எதிரிகளை தேடிச்சென்ற நேரம் அவரை எதிரிகள் கொன்றபோது தனது கணவனின் வீட்டில் இருந்தார்கள். நபி (ஸல்) விடம் தாய்வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டபோது கணவனுடன் வாழ்ந்த வீட்டிலேயே இருக்குமாறு நபி (ஸல்) உபதேசம் செய்த்தார்கள்.
🔷 இந்த சம்பவத்தை கேட்டு புரையா பின்த் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டு உஸ்மான் (ரலி) அதை அமல்படுத்த சொன்னதாக அறிய முடிகிறது. ஒரே ஒருவர் அறிவித்த இந்த அறிவிப்பை உஸ்மான் (ரலி) ஏற்றுக்கொண்டார்கள் என அறிய முடிகிறது. எனினும் இந்த அறிவிப்பாளர் தொடரில் சில குறைகள் இருக்கவே செய்கிறது.