Home / கட்டுரை / கட்டுரைகள் / கண்ணூர்(கண்திருஷ்டி) உண்மை

கண்ணூர்(கண்திருஷ்டி) உண்மை

وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ ﴿٥١
 وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ ﴿٥٢
((முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். இவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். அது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.)  அல் கலம் – 51-52
இவ்வசனம் கண்ணூர்(கண்திருஷ்டி) உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது. இது பற்றி பல ஹதீஸ்களும் வந்துள்ளன.
இதற்கான சான்றுகள்:
((முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர்.)
அல் கலம் – 51.
(‘என் மக்களே! ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்” என்றார்.) யூஸுப் – 67.
மக்கள் மூலம் கண்திருஷ்டி ஏற்படும் என யஃகூப் (அலை) அவர்கள் பயந்தார்கள் காரணம், அவரது ஆண்மக்கள் பெருந் தொகையைக் கொண்ட பதினொரு பேர்கள். மேலும் அவர்கள் அழகு நிறைந்தவர்களும், உடல் வலிமை உள்ளவர்களும் என்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணூர் உண்மையானது. கலாக்கத்ரை முந்தக் கூடிய ஏதாவது ஒன்றிருக்குமென்றிருந்தால் அது கண்ணூராகத் தான் இருக்கும். மேலும், குளிக்க வேண்டி ஏற்பட்டால் குளித்துக் கொள்ளுங்கள்.
                            அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி).
                            நூல்: முஸ்லிம் – 1719.
குறிப்பு: கண்ணூர் யார் மூலம் ஏற்பட்டது எனத்தெரிய வந்தால், அவரிடம் வுழூச் செய்யும்படிக் கூறி, அவர் வுழூச் செய்து விட்டு எஞ்சிய நீரை கண்ணூர் ஏற்பட்டவர் குளிக்க வேண்டும். (மேற்கூறப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்).
யாவற்றையும் நன்கறிந்தவன் மாபெரும் கிருபையாளன் அல்லாஹ் ஒருவனே!

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply