Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 24

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 24

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 24

💠 முதிர்ச்சியடையாமல் குறைவான அறிவோடு எதையும் அணுகுதல் கூடாது  ஒரு கருத்தை நாம் முன் வைக்கும்போது அதைப்பற்றிய முழுமையான புரிதலுடன் நாம் இருக்க வேண்டும்.

💠 மேற்கத்திய கருத்துக்களையும் கலாச்சாரங்களையும் உள்வாங்கியவர்களாகவே நாம் இருக்கின்றோம். ஆகவே நமக்கு முன் சென்ற அறிஞர்கள் இஸ்லாத்தை உள்வாங்கியதைப்போன்று மார்க்கத்தை புரிந்து கொள்ளவேண்டும் தவிர நவீன சிந்தனைகள், அசத்திய கொள்கையினரின் கருத்துக்கள், கீழையாதவர்களின் கருத்துக்கள்(orientalist) போன்றவற்றை உள்வாங்கி விடக்கூடாது.

💠 வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்

💠 இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்) இபாதத்தில் சலிப்படைந்தவர்களும், மார்க்கத்தை எளிதாக காண்பவர்களுக்கு, தக்வா வை விட்டு தூரமானவர்களுமே வீண் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

💠 ஒருவரிடம் பேசும் முன் அந்த பேச்சு இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தருமா என்று சிந்தித்த பின்னரே ஒரு நல்ல கல்வியாளர் தனது பேச்சை தொடருவார்.

💠 கல்வியாளர்கள் இயக்கங்களாகவும் குழுக்களாகவும் பிரிந்து விடக்கூடாது. நமக்கு முன் சென்ற அறிஞர்கள் தம்மை தாம் முஸ்லீம் என்ற ஒரே ஒரு அடையாளத்துடன் தான் வாழ்ந்தார்கள்.

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ

41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply