Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 6

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 6

ஸீரா பாகம் – 6

நபியை நம்பிக்கை கொள்வோம்

ஜுபைர்(ரலி) விற்குமன்சாரி தோழர் ஒருவருக்கும் இடையில் உண்டான பிரச்சனையில் அல்லாஹ் இறக்கிய வசனம்.

 ஸூரத்துன்னிஸா 4 : 65 

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்

ஸூரத்துல் அஹ்ஜாப 33 : 36

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما, قال : قال رسول الله صلي الله

عليه وسلم : لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به

நபி(ஸல்) நான் கொண்டு வந்ததை உங்கள் ஆசைகள் பின்பற்றாத வரை நீங்கள் முஃமினாக ஆக முடியாது.

ஸூரத்துல் பகரா 2 : 34

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.

அல்லாஹ் மலக்குகளிடம் ஆதம்(அலை) க்கு சுஜூத் செய்யச் சொன்னபோது ஷைத்தான் பெருமையடித்தான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply