Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 1

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 1

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 1

 நபி (ஸல்) – எப்பொழுது மிம்பர்களில் தஜ்ஜாலைப் பற்றி பேசப்படுவது குறைகிறதோ அப்போது தஜ்ஜால் வெளியே வருவான்

 மறுமையின் சிறிய அடையாளங்கள் சில நடந்து முடிந்து விட்டது, சில நடந்து கொண்டிருக்கிறது, சில நடக்கவிருக்கிறது.

ஸூரத்துல் கமர் 54:1

اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏

  (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.

ஸூரத்துல் அன்பியா 21:1

اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِىْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ‌ۚ‏

  மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.

ஸூரத்துந் நஹ்ல் 16:1

اَتٰۤى اَمْرُ اللّٰهِ فَلَا تَسْتَعْجِلُوْهُ‌ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏

  அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது; அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் – அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்.

ஸூரத்துந் நஹ்ல் 16:77

وَمَاۤ اَمْرُ السَّاعَةِ اِلَّا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ‌ؕ ‏

  மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேளையின் விஷயம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.

 ஸூரத்துல் கமர் 54:46

بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰى وَاَمَرُّ‏

  அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.

ஸூரத்துந் நாஜிஆத் 79: 42, 43, 44, 46

 (42) يَسْــٴَــلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰٮهَا ؕ‏

  (நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி – அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.

(43) فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰٮهَاؕ

  அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

(44)  اِلٰى رَبِّكَ مُنْتَهٰٮهَاؕ‏

  அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

(46)  كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوْۤا اِلَّا عَشِيَّةً اَوْ ضُحٰٮهَا

  நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply