Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா 02 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா 02 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா

பாகம் ௦2 

💕குர்ஆனில் ஜாஹிலிய்யா மக்களின் நம்பிக்கைகளில் சிலவற்றை அல்லாஹ் எடுத்துக்கூறுகிறான்

அல்லாஹ்விடம் சிலைகள் பரிந்துரை செய்யும் என்ற தவறான எண்ணத்தின் காரணமாகவே அவர்கள் அவைகளை வணங்கி வந்தார்கள்.

🏵 ஸூரத்து யூனுஸ் 10:18

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَآؤُنَا عِنْدَ

اللّٰهِ‌ؕ…

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்;…

இந்த வசனத்தின் மூலம் அவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள் என்று விளங்குகிறது

கஃபாவில் இப்ராஹிம் (அலை) இஸ்மாயில் (அலை) அவர்களுடைய சிலைகளையும் வைத்திருந்தார்கள்.

💕  மூதாதையரின் வழியே சரி என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்

🏵 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:22

بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَىٰ أُمَّةٍ وَإِنَّا عَلَىٰ آثَارِهِم مُّهْتَدُونَ

அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.”

💕ஹஜ்ஜில் கலக்கப்பட்ட மூட நம்பிக்கைகள்

 

  • கஃபாவில் சிலைகள் வைக்கப்பட்டன.
  • அந்த சிலைகளை சுற்றி தவாஃப் செய்தார்கள்.
  • ஸஃபாவிலும் மர்வா விலும் சிலைகள் வைத்திருந்தார்கள்.
  • இப்ராஹிம் நபி காட்டித்தந்த முறைக்கு மாற்றமாக அரபா தினத்தில் முஸ்தலிஃபா வில் தங்கினார்கள்.
  • பாவம் செய்த ஆடைகளுடன் கஃபாவை வலம் வர முடியாது என்று கூறி நிர்வானமாக வலம் வந்தார்கள்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply