Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 15

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 15

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 15

❤வசனம் 12:

لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏

அதை கேட்காமல் இருந்திருந்தால் ↔ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ

எண்ணினால் ↔ ظَنَّ

முஃமினான ஆண்கள் ↔ لْمُؤْمِنُوْنَ

முஃமினான பெண்கள் ↔ وَالْمُؤْمِنٰتُ

தங்களை↔ بِاَنْفُسِهِمْ

நன்மை ↔ خَيْرًاۙ

அவர்கள் கூறினார்கள் ↔ وَّقَالُوْا

இது பகிரங்கமான வீண் பழியாகும் ↔ هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ

  முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் – இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?

உலமாக்களின் கருத்து :

புறம் பேசுவதும் கோள்மூட்டுவதும் அதை கேட்பதும் ஹராம்.

தபூக் யுத்தத்தின் நேரத்தில் – நபி(ஸல்) – கஃஹப் இப்னு மாலிக் (ரலி) எங்கே? – ஒருவர் – அவருக்கு உலக ஆசை வந்துவிட்டது அதனால் தான் யுத்தத்திற்கு வரவில்லை – வேறொரு ஸஹாபி – கஃஹப் (ரலி) அல்லாஹ்வையும் அவருடைய தூதரையும் விரும்பக்கூடியவர் என்கிறார்.

தஃப்ஸீர் ஆசிரியர் கூறுகிறார் :

அபூ அய்யூப் உம்மு அய்யூப் (ரலி) இருவரும் ஆயிஷா(ரலி) வின் இந்த செய்தியைப் பற்றி பேசும்போது கணவர் கூறினார் உன்னைப்பற்றி இப்படியொரு செய்தி பரப்பப்பட்டிருந்தால் உன் நிலை எப்படியிருக்கும் உண்மையில் நீ இப்படிப்பட்ட அசிங்கத்தை செய்திருப்பாயா? – நான் இப்படி செய்திருக்கவே மாட்டேன். உன்னை விட பலமடங்கு சிறந்த ஆயிஷா(ரலி) இதை செய்திருப்பாரா என்று கணவர் கேட்டார்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply