Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 89

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 89

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 89

❤ வசனம் : 47

وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ‌ؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ

بِالْمُؤْمِنِيْنَ‏

وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا

நாங்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் ஈமான்  கொண்டோம் மேலும் கட்டுப்படுகிறோம்

ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ‌ؕ

(ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர்

எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர். ↔ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ‏ 

“அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்” என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் – எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.

💠முனாபிக்குகள் இஸ்லாத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் கட்டுப்பட மாட்டார்கள்.

💠ஒருவரை விமர்சனம் செய்யும்போது நடுநிலையாக விமர்சிக்க வேண்டும்.

ஸூரத்துன்னிஸாவு 4:142

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply