Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 94

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 94

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 94

❤ வசனம் : 55

وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ

الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ  وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ

اَمْنًا‌ ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا‌ ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏

وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை

لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ அவர்களுக்கு பூமியில் ஆட்சியை கொடுப்பதாக

كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ

அவர்களுக்கு முன்னால்  ஆட்சியை  கொடுத்தது போன்று

وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ

அவன் பொருந்திக்கொண்ட மார்க்கத்தில் பிடிப்போடு இருப்பதற்காகவும்

وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا‌

அவர்களுடைய பயத்திற்கு பிறகு பாதுகாப்பை தருவதாக வாக்களித்துள்ளான்

يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا‌ ؕ

அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்

ؕ ↔ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ

இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

❤ வசனம் : 56

وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَ اٰ تُوا الزَّكٰوةَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏

தொழுகையை நிலைநிறுத்துங்கள் ↔  وَاَقِيْمُوا الصَّلٰوةَ

  ஜகாத் கொடுத்துவாருங்கள் ↔ وَ اٰ تُوا الزَّكٰوةَ

   ரஸூலுக்கு கட்டுப்பாடுங்கள் ↔ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ

நீங்கள் கிருபை(அன்பு) செய்யப்படும் பொருட்டு ↔ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏ 

(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.

❤ வசனம் : 57

لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ‌ۚ وَمَاْوٰٮهُمُ النَّارُ‌ؕ وَلَبِئْسَ الْمَصِيْرُ

لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ‌ۚ

நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம்

அவர்கள் தங்குமிடம் நரகமாகும் ↔ وَمَاْوٰٮهُمُ النَّارُ‌ؕ 

ஒதுங்கக்கூடிய இடங்களில் அது மிக மோசமான இடமாகும்.↔ وَلَبِئْسَ الْمَصِيْرُ

நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.  

وَمَنْ مَاتَ وَلَيْسَ فِي عُنُقِهِ بَيْعَةٌ مَاتَ مَيْتَةً جَاهِلِيَّةً “

இப்னு உமர் (ரலி)-நபி (ஸல்) – யார் பைஅத் செய்யாமல் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய்யத்தான மரணத்தை சந்திக்கிறார்.  

இஸ்லாமிய கிலாஃபத்திற்கான நிபந்தனைகள்

  • ஈமான் இருக்க வேண்டும்.
  • நல்ல அமல்கள் இருக்க வேண்டும்.
  • அல்லாஹ் வுக்கு கட்டுப்பட்ட அடிமைகளாக இருக்க வேண்டும்.
  • ஷிர்க் செய்யக்கூடாது.

முஸ்லீம் மக்கள் நிதானமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply