Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 1

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 1

ஸீரா பாகம் – 1

நேசம் இன்றி ஈமான் இல்லை

அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதர் மீதும் நேசம் வைப்பது ஈமானின் ஒரு பகுதியாகும்.

ஸஹாபாக்கள் மார்க்கத்தை இந்த அளவிற்கு பின்பற்றினார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதரின் மீதும் கொண்டிருந்த நேசமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காமல் அவர்களுடைய இஸ்லாமும் ஈமானும் முழுமையடையாது.

ஸூரத்துல் ஆதியாத்தி – 8:

وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ‏

 இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.

ஸூரத்துல் ஃபஜ்ரி – 20 :

وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ؕ‏

இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

ஸூரத்துல் கியாமா – 20 :

كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۙ‏

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

உலக விஷயங்களை நேசிப்பதில் தவறில்லை. ஆனால் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் விட அதிகமாக உலக விஷயங்களை நேசிக்கக் கூடாது.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply