Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 81

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 81

ஹதீஸ் பாகம்-81

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

حذيفة قال حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين رأيت أحدهما وأنا

أنتظر الآخر حدثنا أن الأمانة نزلت في جذر قلوب الرجال ثم علموا من القرآن ثم

علموا من السنة وحدثنا عن رفعها قال ينام الرجل النومة فتقبض الأمانة من قلبه

فيظل أثرها مثل [ ص: 2383 ] أثر الوكت ثم ينام النومة فتقبض فيبقى أثرها

مثل المجل كجمر دحرجته على رجلك فنفط فتراه منتبرا وليس فيه شيء فيصبح

الناس يتبايعون فلا يكاد أحد يؤدي الأمانة فيقال إن في بني فلان رجلا أمينا ويقال

للرجل ما أعقله وما أظرفه وما أجلده وما في قلبه مثقال حبة خردل من إيمان

ولقد أتى علي زمان وما أبالي أيكم بايعت لئن كان مسلما رده علي الإسلام وإن

كان نصرانيا رده علي ساعيه فأما اليوم فما كنت أبايع إلا فلانا وفلانا

ஹுதைஃபா (ரலி) – நபி (ஸல்) எங்களுக்கு இரண்டு விஷயங்களை சொன்னார்கள் ஒன்றை நான் பார்த்துவிட்டேன் மற்றொன்றை எதிரிபார்த்திருக்கிறேன் அல்லாஹ் அமானிதத்தை மனிதனின் உள்ளத்தின் ஆழத்தில் வைத்திருந்தான் பின்னர் குர்ஆனிலிருந்து படித்தார்கள் மேலும் சுன்னத்திலிருந்து படித்தார்கள் அந்த அமானிதம் எப்படி போகும் என்று சொன்னார்கள். ஒரு மனிதன் தூங்குகிறான்; அமானிதத்தை அல்லாஹ் அவரது உள்ளத்திலிருந்து எடுத்து விடுவான்’ பின்னர் காயம் ஏற்பட்ட வடுவைப்போல அவனது உள்ளத்தில் ஒரு அடையாளம் இருக்கும். பின்பொரு தூக்கம் தூங்குவான் அப்போது அது ஒரு கொப்பளம் போலாகிவிடும் ஒரு நெருப்புக்கட்டி கையிலும் காலிலும் உருண்டு அவ்விடத்தில் வீக்கம் ஏற்பட்டு அதிலொரு வட்டமான கொப்பளத்தை காண்பீர்கள் அதை உடைத்தால் அதிலொன்றும் இருக்காது. மக்கள் வியாபாரம் செய்வார்கள் ஆனால் எவரும் அமானிதத்தை பேண மாட்டார்கள்; அந்த ஒரு இடத்தில ஒரு நேர்மையான மனிதர் இருக்கிறாராம் என்று கேள்விப்படும் அளவு ஆகி விடும் சில மனிதர்களைப்பற்றி கூறப்படும் அவர் மிகவும் புத்தியுள்ளவர், மிகவும் நுட்பமானவர், மிகவும் உறுதியானவர் என்றெல்லாம் கூறப்படும் ஆனால் அவருடைய உள்ளத்தில் அணுவளவும் ஈமான் இருக்காது. ஒரு காலத்தில் நான் யாருடன் வியாபாரம் செய்தலும் பயப்படாமல் செய்தேன் அவர் முஸ்லிமாக இருந்தால் அவருடைய இஸ்லாமிய தன்மை அந்த அமானிதத்தை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் அவர் கிறிஸ்தவராக இருந்தால் அவருடைய பொறுப்பாளர் என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார் ஆனால் இன்றோ வியாபாரம் என்றால் குறிப்பிட்ட சிலரோடு மட்டுமே நான் செய்வேன் வேறெவரோடும் செய்ய மாட்டேன்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply