Home / மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி

மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி

நரக நெருப்பை அஞ்சிக் கொள்வோம்…

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதன் இந்த உலகில் எத்தனையோ விதமான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டால் அவனது நிலை மறக்குமளவுக்கு சந்தோஷப்படுகிறான். ஆனால் இவன் சந்தோஷப்பட காரணமாக அமைந்த இந்த வெற்றி தற்காலிகமான சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றியேயாகும். ஒருவர் ஒரு வருடத்திற்கு முன் ஒரு போட்டியொன்றில் பங்குபற்றி அதில் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு இந்த வருடம் அவ்வெற்றி அதனுடைய மகிழ்ச்சியைக் காட்டாது. ஆகக்கூடினால் அந்த வெற்றியின் சந்தோஷம் …

Read More »

“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது. அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் …

Read More »

ருகூஃ, ஸுஜுதுகளில் ஓத முடியுமான அவ்ராதுகள்…

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதனைப் படைத்த அல்லாஹ்வுத்தஆலா அவன் நாளாந்தம் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்பதற்காக சில கடமைகளை மனிதன் மீது கடமையாக்கி இருக்கிறான். அவ்வாறு கடமையாக்கப்பட்ட கடமைகளில் ஒன்று தான் தொழுகையாகும். சில தொழுகைகள் மனிதன் மீது கடமையானதாகவும் இன்னும் சில தொழுகைகள் சுன்னத்தாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. எந்த தொழுகைகளாக இருந்தாலும் அவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்ற ஒழுங்கினை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சினிமா பார்ப்பது கூடுமா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். எம்மையெல்லாம் படைத்த இறைவன் எம்முடைய உடல் உறுப்புகளை தவறான செயல்களை செய்வதை விட்டும் பாதுகாக்குமாறு ஏவியிருக்கிறான். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தவறான காரியங்களை செய்வதை விட்டும் உடல் உறுப்புகளை பாதுகாப்பதானது அல்லாஹ் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகப் பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அருட்கொடைகளை பாவ காரியங்களின் பக்கம் திருப்புபவர்களை அல்லாஹ் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்திருக்கிறான். அல்லாஹ் தந்த உறுப்புகளில் முக்கியானவைகள்தான் செவிப்புலனும் பார்வைப்புலனுமாகும். …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டமும் அதற்கான ஆதாரங்களும்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. கடமையான தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுமாறு இந்த மார்க்கம் சொல்லித் தந்திருக்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டத்தை அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் மூலமாக வாசித்துப் பார்க்கின்ற போது ஜமாஅத் தொழுகையானது ஒவ்வொரு ஆண்கள் மீதும் வாஜிபான தொழுகைதான் என்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இதற்கு அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் இருந்து சில ஆதாரங்களை பார்க்க முடிகின்றது. …

Read More »

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

بسم الله الرحمن الرحيم உலகில் படைக்கப்பட்ட எல்லாப் படைப்புக்குறிய படைப்பாளன் அல்லாஹ் ஆவான். அவன் நாடியதைச் செய்யக்கூடிய வல்லவன். மனிதர்களாக பிறந்த எல்லோரும் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் முதலாவது அல்லாஹ்வை ஈமான் கொள்வதாகும். கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ அப்படியே விசுவாசங்கொள்ள வேண்டும். அதில் பகுத்தறிவை வைத்து சிந்திக்கின்ற போது அது வழிகேட்டின் பால் கொண்டுபோய் சேர்த்து விடும். அந்தடிப்படையில் சமூகத்தில் இருக்கின்ற …

Read More »

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி?

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது இடம் பெறுகின்ற தவறுகளில் …

Read More »

அல்லாஹ்வினுடைய றஹ்மத்தை அறிந்து கொள்வோம்…!

M.F.பர்ஹான் அஹமட் ஸலபி உலகில் வாழ்கின்ற மனிதனது நோக்கங்களை இரண்டு வகையாக பிரித்து அறியலாம். முதலாவது வகை உலக வாழ்வுடன் தொடர்புடையது. தான் இந்த உலகத்தில் வாழ்கின்ற போது தனது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டு முகாமைத்துவம் செய்து வாழலாம் என்று இவ்வுலக வாழ்வின் நோக்கத்தை அடைவதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவதாகும். ஆனால் உண்மையான முஃமினின் வாழ்க்கையை பொருத்தமட்டில் அவன் உலக வாழ்வையும் பார்க்க மறுமையில் தான் ஈடேற்றமான வாழ்க்கையை பெற்றுக் …

Read More »

நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்…

بسم الله الرحمن الرحيم. -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி அல்லாஹ்வை மாத்திரம் இறைவனாக ஏற்ற முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தமக்கு மத்தியில் கொள்கையடிப்படையில் சகோதரர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். தன்னுடனேயே பிறந்து ஒன்றாக வளர்ந்த உடன் பிறந்த சகோதரன் ஏதாவது தவறு செய்கின்ற போது எப்படி அவனை அத்தவறை விட்டும் தடுக்கின்றோமோ அதே போன்று கொள்கை ரீதியாக சகோதரர்களாக இருக்கின்ற நாமும் தவறுகள் செய்கின்ற போது நமக்கு மத்தியில் திருத்தக் கூடியவர்களாக …

Read More »

அலங்காரமாக மாற்றப்பட்ட தவறான விடயங்கள்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி இந்த மார்க்கம் மனித வாழ்க்கைகுறிய அத்தனை விடயங்களையும் தெளிவுபடுத்துவதாக இருந்து கொண்டிருக்கின்றது. இதில் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு விடயங்களும் மனிதனை புனிதனாக மாற்றக்கூடியதாக இருக்கிறது. ஆனால் கவலைக்குறிய விடயம் என்னவென்றால் மார்க்கம் சொல்லித் தந்த விடயங்கள் மனிதனை தூய்மையானவனாக மாற்றக்கூடியதாக இருந்தும் அதற்கு முரணாக நடப்பது தான் அலங்காரமான விடயங்களாக பார்க்கப்படுகின்றது. அந்தடிப்படையில் சில விடயங்களை சுட்டிக்காட்டலாமென நினைக்கிறேன். நகங்களை நீளமாக வளர விடுதல்: இஸ்லாம் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் நிய்யத்தும் அதன் சரியான இடமும்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி நாம் நாள் தோறும் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். அவைகளில் சில நேரங்களை வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் சில நேரங்களை உலகக் காரியங்களுடன் தொடர்புடையவைகளாக ஆக்கியிருக்கின்றோம். இந்தடிப்படையில் நாம் செய்கின்ற வணக்கங்களுடன் சம்பந்தப்பட்ட காரியங்களையும் பிரித்துக் காட்டுவது இந்த நிய்யதாகும். நாம் செய்கின்ற வணக்கங்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்தால் நிய்யத் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதனால் தான் …

Read More »

மனித வாழ்வில் இறையச்சமும் அதனுடைய முக்கியத்துவமும்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உலக வாழ்வில் வாழுகின்ற போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமானது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் எப்போது இல்லாது போகின்றதோ அப்போதே பாவ காரியங்கள் தலைவிரித்தாடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும், மனித உரிமைகள் சர்வசாதாரணமாக மீறப்பட்டுவிடும். எனவே இறையச்சம் என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இறையச்சம் என்றால் என்ன? இறையச்சம் என்றால் என்னவென்பது பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு …

Read More »

நேர்வழியின் பெறுமதியை உணர்வோம்.

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உலகத்தில் விலை மதிக்க முடியாத அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று தான் எமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற இந்த ஹிதாயத் என்று சொல்லப்படுகின்ற நேர்வழியாகும். இதற்காக வேண்டி நாம் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வுக்கு ஸூஜூதில் இருந்தால் கூட அதற்கு ஈடாகமாட்டாது. நாம் நாளந்தம் எத்தனையோ விதமான பொருட்களை கடவுள் என்று நினைத்து வணங்கக்கூடிய மக்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவைகளை வைத்து நமக்கு அல்லாஹ் வழங்கிய நேர்வழியின் …

Read More »

அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவை பிரச்சாரம் செய்பவர்களை வஹ்ஹாபிகள் என்று சொல்வதன் யதார்த்தம்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி எம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் எப்படியாவது சத்தியத்தை பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறான். அந்தடிப்படையில் தான் காலத்துக்குக் காலம் நபிமார்களையும் ரஸூல்மார்களையும் மக்களுக்கு அனுப்பி சத்தியத்தை உண்மையான முறையில் எத்திவைத்தான். நபியவர்களது தூதுத்துவப் பணிக்குப் பின் எந்த நபியோ ரஸூலோ வரமாட்டார்கள் என்று இம்மார்க்கம் சொன்னதன் பிரகாரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்துக்குப் பின் சத்தியத்தை உலமாக்களை வைத்து அல்லாஹ் மக்களுக்குக் கற்றுக் …

Read More »

பிள்ளைகளை ஸாலிஹான பிள்ளைகளாக வளர்த்தெடுப்போம்.

بسم الله الرحمن الرحيم -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி நவீன காலத்தை பொருத்தமட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் பிரதானமானதுதான் தன்னுடைய பிள்ளைகளை எவ்வாறு ஸாலிஹான பிள்ளைகளாக உருவாக்குவதென்பதாகும். ஏனெனில் நவீன கால கண்டுபிடிப்புகளுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் இன்று முஸ்லிம் சமுதாயம் எவ்வித வயது வித்தியாசமுமின்றி அடிமையாகியுள்ளது. ஒவ்வொரு பெற்றோர்களதும் ஆசையும் கனவும் தனக்கு பிறக்கயிருக்கின்ற குழந்தையை இறுதி வரைக்கும் நல்ல பிள்ளையாக வாழ வைக்க வேண்டுமென்பதாகும். ஆனால் …

Read More »

கப்று வணக்கமும் சிலை வணக்கமும்…

بسم الله الرحمن الرحيم -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி அல்லாஹ்வுக்கு மிகவுமே கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம் அவன் எம்மைப் படைத்திருக்க நாம் அவனை வணங்காமல் அவனுக்கு இணைவைப்பதாகும். எம்மையெல்லாம் படைத்த அல்லாஹ்வுத்தஆலா நாம் எவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்ற வழிகாட்டலை தராமல் விட்டதில்லை. அந்தடிப்படையில் எமக்கு வழிகாட்டிகளாக காணப்படுகின்ற அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இணைவைப்பின் விபரீதம் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தடிப்படையில் தான் சிலை வணக்கமென்பதை எப்படி நாம் இணைவைப்பென்று …

Read More »

இஸ்லாமும் மாற்று மத கலாச்சாரங்களும்

بسم الله الرحمن الرحيم _ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி எம்மை படைப்புகளிலெல்லாம் சிறந்த படைப்பாக ஆக்கிய அல்லாஹ்வுத்தஆலா அதை விட விலை மதிக்கமுடியாத பெரிய அருட்கொடையைத் தந்து எம்மை மென்மேலும் கண்ணியப்படுத்தியிருக்கிறான். அதுதான் இஸ்லாம் என்கின்ற இந்த பரிசுத்த மார்க்கமாகும். அதிலுள்ள சட்டங்கள் மனிதனை புனிதமான ஒருவனாக மாற்றுவதுடன் , ஒரு மனிதன் காலையில் விழித்ததிலிருந்து இரவில் தூங்க செல்லுகின்ற வரை எவ்வாறு அவனுடைய காரியங்களை அமைத்துக் கொள்ள …

Read More »

பெரும்பாவங்களை அறிந்து கொள்வோம்

بسم الله الرحمن الرحيم மனிதன் செய்கின்ற பாவங்களை இரண்டு வகைகளாக பிரித்து நோக்க முடியும். சிறிய பாவங்கள்:- இப்பாவங்கள் சில வேளைகளில் மனிதன் அறிந்ததும் அறியாமலும் செய்து கொள்ள முடியும். இவைகளிலிருந்து பாவமன்னிப்பு பெறுவதாக இருந்தால் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உதாரணம்: கடமையான தொழுகைகளை பேணித் தொழுதல், வுழுவினை பூரணமாக செய்தல் இன்னும் சில உபரியான வணக்கங்களை செய்வது எம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமையும். …

Read More »