அல்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் வெறுப்புக்குரியவர்களில் சிலர்:
அல்லாஹ் போட்ட வரம்புகளை மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை:
وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
“ஆனால் வரம்பு மீறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை”. (அல்பகரா 2: 190).
நிராகரித்துக்கொண்டிருக்கும் பாவிகளை அல்லாஹ் நேசிப்பதில்லை:
وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
“‘(தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை”. (அல்பகரா 2: 276).
فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
“நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை (நிராகரிப்பாளர்களை) நேசிப்பதில்லை”. (ஆல இம்ரான் 3:32).
إِنَّهُ لَا يُحِبُّ الْكَافِرِينَ
“நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை (நிராகரிப்பாளர்களை) நேசிக்க மாட்டான்” (அர்ரூம் 30: 45).
அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை:
وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
“அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்”. (ஆல இம்ரான் 3:57)
وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
“அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை”. (ஆல இம்ரான் 3: 140).
إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
“நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்”. (அஷ்ஷுரா 42: 40).
ஆணவம் கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை:
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை”. (அந்நிஸா 4: 36).
إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ
” (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை”. (அந்நஹ்ல் 16: 23).
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
“நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” (அல்கஸஸ் 28: 76).
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
“ஆணவம் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்ல்லாஹ் நேசிக்க மாட்டான்”. (லுக்மான் 31: 18).
மோசடிக்காரர்களையும், பாவிகளையும் அல்லாஹ் நேசிப்பதில்லை:
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا
“ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (அந்நிஸா 4: 107).
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ
“நிச்சயமாக அல்லாஹ் மோசடி செய்பவர்களை நேசிப்பதில்லை”. (அல் அன்பாஃல் 8: 58).
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ
“நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (அல்ஹஜ் 22: 38)
பூமியில் குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நேசிப்பதில்லை:
وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
“அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்”. (அல்மாயிதா 5: 64).
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
“நிச்சயமாக அல்லாஹ் குழப்பம செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்கஸஸ் 28: 77).
வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை:
وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
“வீண் விரயம் செய்யாதீர்கள் – நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல் அன்ஆம் 6: 141).
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
“எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. (அல் அஃராப்ஃ 7: 31).
அல்லாஹ்வின் வெறுப்பைப்பையும், கோபத்தையும் சம்பாதித்துக்கொண்ட ஒருவன் நிச்சயமாக ஈருலகிலும் ஈடேற்றம் பெறவே முடியாது. அவனது நாளை மறுமையின் நஷ்டம் இன்னும் பயங்கரமானதாகும்.
எனவே அல்லாஹ்வின் நேசத்திற்குரிய பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வோம். அவனது வெறுப்பையும், கோபத்தையும் பெற்றுத்தருகின்ற மோசமான பண்புகளை விட்டு விலகிக்கொள்வோம்.
தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி