Home / Tag Archives: Al Islah உசூலுல் ஹதீஸ்

Tag Archives: Al Islah உசூலுல் ஹதீஸ்

உசூலுல் ஹதீஸ் பாகம் 31

உசூலுல் ஹதீஸ் பாகம்-31 அல் காஃபீ யும் அல் புஹாரியும் 💠 அல் காஃபீ என்ற ஷியாக்களின் ஹதீஸ் கிரந்தத்திற்கும் ஸஹீஹ் புஹாரிக்கும் எந்த அடிப்படையிலும் நிகராக முடியாது. 💠 இமாம் புஹாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் தொடர்ச்சியாக வருகிறதா, அறிவிப்பாளருக்கு மனன சக்தி இருக்கிறதா, போன்ற பல ஆய்வுகளை செய்து ஹதீஸுகளை அமானிதமான முறையில் மக்களிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் இது போன்ற எந்த ஒரு அடிப்படையையும் எடுத்துக்கொள்ளாமல் எழுதப்பட்ட …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 30

உசூலுல் ஹதீஸ் பாகம்-30 ஷியாக்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் கிரந்தங்கள் குலைனீ என்பவர் எழுதிய அல் காஃபீ ﺍﻟﻜﺘﺎﺏ: ﺍﻟﻜﺎﻓﻲ. ﺍﻟﻤﺆﻟﻒ: ﺍﻟﺸﻴﺦ ﺍﻟﻜﻠﻴﻨﻲ (அஹ்லுஸ்ஸுன்னாவினர் புஹாரியை முக்கிய நூலாக கருதுவது போல ஷியாக்கள் இந்த நூலை முக்கியமாக கருதுகின்றனர்) தூஸீ எழுதிய தஹ்த்தீபுல் அஹ்காம் ﺍﻟﻜﺘﺎﺏ: ﺗﻬﺬﻳﺐ ﺍﻷﺣﻜﺎﻡ. ﺍﻟﻤﺆﻟﻒ: ﺍﻟﺸﻴﺦ ﺍﻟﻄﻮﺳﻲ தூஸீ எழுதிய அல் இஸ்திப்சார்  اب الإستبصار لشيخ الطوسي அஷ் ஷேக் அஸ் சதூக் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 29

உசூலுல் ஹதீஸ் பாகம்-29    ஷியாக்கள் ஹதீஸை எவ்வாறு தரம் பிரிக்கிறார்கள்? 💠 அவர்கள் ஹதீஸ்களை 4 வகையாக தரம் பிரிக்கிறார்கள். الحديث الصحيح அல் ஹதீஸ் ஸஹீஹ் الحديث الحسنஅல் ஹதீஸ் ஹஸன் الحديث الموثق அல் ஹதீஸ் முவத்தக் الحديث الضعيف அல் ஹதீஸ் லயீஃப் அஹ்லுஸ்ஸுன்னாவினர் ஸஹீஹிற்கு கீழ்கண்ட வரைவிலக்கணம் வைத்துள்ளனர். اتصال السندஅறிவிப்பாளர் வரிசை தொடராக இருக்க வேண்டும் عدالة الراوي அறிவிப்பாளர் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 28

உசூலுல் ஹதீஸ் பாகம்-28 ஹதீஸுகளைப்பற்றிய ஷியாக்களின் நிலைப்பாடு : 💠 ஷியாக்களின் முக்கிய அடிப்படையே நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் கலீஃபாவாகவேண்டிய ஒரே தகுதி அலீ (ரலி) அவர்களுக்கு மட்டுமே உள்ளது மேலும் நபி (ஸல்) அலீ (ரலி) அவர்களைத்தான் அடுத்த கலீஃபா வாக நியமித்தார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். நபி (ஸல்) அவர்களது மரணத்திற்கு பின்னர் அலீ (ரலி) கலீஃபா ஆவதற்கு உடன்படாத ஸஹாபாக்கள் அனைவரும் பாவிகளாகவும், காஃபிர்கள் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 27

உசூலுல் ஹதீஸ் பாகம்-27 ஹவாரிஜுகளுக்கும் சுன்னாவிற்கும் உள்ள நிலைப்பாடு: நபி (ஸல்) வின் சுன்னாக்களில் முத்தவாதிராக(ஏராளமான அறிவிப்பாளர்களுடன் வரும் ஹதீஸை) வருவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆஹாதுகளை (குறைந்த அறிவிப்பாளர் வரிசையிலுள்ள ஹதீஸ்) ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தில் இருந்தார்கள். அவர்கள் நிராகரித்தவை: திருமணம் செய்தவர் விபச்சாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற சட்டத்தை மறுத்தார்கள். உளூச்செய்யும்போது காலுறையின் மீது தடவுதலை மறுத்தார்கள். திருடியவருக்கு மணிக்கட்டு வரை கையை …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 26

உசூலுல் ஹதீஸ் பாகம்-26 🔷 உஸ்மான் (ரலி) காலத்தில் குர்ஆ என்ற துறவிகள் அல்லது கூடுதலாக வணக்கங்கள் செய்யக்கூடிய கூட்டத்தினர். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். அவரது 18 கவர்னர் களில் ஐவர் அவரது கோத்திரத்தினராக இருந்ததால் அவர்  தனது உறவினர்களுக்கு அதிகாரத்தில் பங்குகளை அதிகம் வழங்கி விட்டதாக குற்றம் சாட்டினர். உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினர்கள் ஆட்சி சம்மந்தப்பட்ட விஷயத்தில் நடந்து கொண்ட …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 25

உசூலுல் ஹதீஸ் பாகம்-25 🌷 அதற்கு பிறகு யஸீத் இப்னு முஆவியா அவர்களும் மரணித்தபோது. அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) தன்னைத்தானே கலீஃபாவாக அறிவித்தார்கள், சிலர் அதற்கு உடன்பட்டாலும் ஷாமிற்கு சென்ற சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு மர்வான் என்பவர் கலீஃபா வாகினார்கள். பிறகு இராக்கில் நாஃபிஹ் இப்னு ஹஜ்ரத் என்ற ஹவாரிஜின் தலைமையிலும் யமாமாவில் நஜ்தா இப்னு ஆமிர் என்பவன் தலைமையின் கீழும் ஒன்று சேர்ந்து மேலும் ஒரு …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 24

உசூலுல் ஹதீஸ் பாகம்-24 🌹 பிறகு யுத்தத்திற்காக ஒன்று சேர்ந்த ஹவாரிஜுகளை முஆவியா (ரலி) எதிர்கொண்டு அவர்களுக்கு பலத்த நஷ்டத்தை(பலரை கொன்று குவித்தார்கள்) ஏற்படுத்தினார்கள். முஆவியா (ரலி) யின் ஆளுமையின் காரணமாக ஹவாரிஜுகள் சிறிது காலத்திற்கு அடங்கி இருந்தார்கள். 🌹 பிறகு ஜியாத் அவர்களின் காலத்திலும் அவர்களது மகன் உபைதுல்லாஹ் அவர்களின் காலத்திலும் ஹவாரிஜுகளை சிறையிலடைத்து அவர்களை அழிக்க முயற்சித்தார்கள்.

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 23

உசூலுல் ஹதீஸ் பாகம்-23 ❈ அப்துல்லாஹ் இப்னு ஹப்பாப் இப்னு அரத் என்பவர் அலீ (ரலி) வின் கவர்னராக இருந்தார்கள். அவர்களுடன் கர்ப்பமான நிலையில் அவர்களின் அடிமைப்பெண் இருந்தார்கள். இருவரையும் கொடூரமான முறையில் கொன்று அந்த பெண்ணின் வயிற்றிலிருக்கும் பிள்ளையை வெளியேற்றினார்கள். இந்த செய்தி அலீ (ரலி) விற்கு கிடைத்தபோது ஷாமிற்கு செல்லவேண்டிய படையை திரட்டி ஹவாரிஜுகள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர்கள் அனைவரையும் அழித்தார்கள் அவர்களில் 10 பேர் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 22

உசூலுல் ஹதீஸ் பாகம்-22 🔷 இதன் காரணமாக ஈராக் வாசிகளுக்கு ஷாம் வாசிகளுக்கும் இடையில்; அலீ (ரலி) அவர்களும் முஆவியா (ரலி) வும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இந்த 2 பிரிவினரும் சில காலத்திற்கு பிறகு ஷாமிற்கும், ஈராக்கிற்கும் நடுவில் ஒரு பகுதியில் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்  அந்த 2 பிரிவினரும் ஸிஃபீன் என்ற இடத்திலிருந்து பிரிந்து சென்றார்கள். 🔷 முஆவியா …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 21

உசூலுல் ஹதீஸ் பாகம்-21 🔷 இப்படி இழுபறி நீடித்த சந்தர்ப்பத்தில் அலீ (ரலி) இராக் மக்களை ஒன்று திரட்டி ஷாம் தேசத்திற்கு படையெடுத்து சென்றார்கள். அங்கே முஆவியா (ரலி) அவர்களும் ஷாம் மக்களை திரட்டி படையெடுத்து வந்தார்கள். இரண்டு படைகளும் ஸிஃப்பீன் என்ற இடத்தில் சந்தித்தார்கள். அங்கு பல மாதங்கள் சண்டை நடைபெற்று ஷாம் தேசத்தவர்கள் தோல்வியடைய இருக்கும் நிலையில் அமர் இப்னு அல் ஆஸ் (ரலி) வின் ஆலோசனையின் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 20

உசூலுல் ஹதீஸ் பாகம்-20 🔷 உஸ்மான் (ரலி) வின் படுகொலைக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்ட தாக்கம் ஹதீஸ் கலையிலும் ஏற்பட்டது. உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது அது நிரப்பப்படாமல் இருந்தது. அப்போது உஸ்மான் (ரலி) வின் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அலீ (ரலி) இடம் தலைமைத்துவத்தை ஏற்குமாறு கோரினர். அதற்கு ஆரம்பத்தில் அலீ (ரலி) மறுத்தாலும் பிறகு கலீஃபா வாக உடன்பட்டு பைஅத் செய்தபோது …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 19

உசூலுல் ஹதீஸ் பாகம்-19 🔷 புஷைர் அல் அதவீ  (بشير العدوي) என்ற தாபிஈ நபி (ஸல்) கூறியதாக செய்திகளை கூறிக்கொண்டே இருந்தார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) செவிசாய்க்கவில்லை. நான் நபியவர்களின் ஹதீஸை அறிவித்துக்கொண்டிருக்கிறேன் நீங்கள் ஏன் செவி சாய்க்க மறுக்கிறீர்கள் என்று அந்த தாபிஈ கேட்டபோது இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் முன்னர் நாங்கள் எவரேனும் நபி (ஸல்) கூறினார்கள் என்று ஒரு செய்தியை கூறினால் எங்களது …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 18

உசூலுல் ஹதீஸ் பாகம்-18 🔷 உஸ்மான் (ரலி) வை கொன்றவர்கள் ஹவாரிஜுகள். அவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு பின்னர் ஹதீஸுக்கு எவர் மூலமெனும் அறிவிக்கப்பட்டால் அவர் அஹ்லுஸ்ஸுன்னாவா அல்லது அஹ்லுல் பித்அத்தா என்று பரிசீலனை செய்ததற்கு பின்னரே ஏற்றுக்கொள்ளப்படும். عن ابن سيرين قال لم يكونوا يسألون عن الإسناد فلما وقعت الفتنة قالوا سموا لنا رجالكم فينظر إلى أهل السنة فيؤخذ حديثهم وينظر إلى …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 17

உசூலுல் ஹதீஸ் பாகம்-17 ஹதீஸ்கள் விஷயத்தில் உஸ்மான் (ரலி) வின் நிலைப்பாடு 🔷 புரையா பின்த் மாலிக் (ரலி) அவர்களது கணவன் எதிரிகளை தேடிச்சென்ற நேரம் அவரை எதிரிகள் கொன்றபோது தனது கணவனின் வீட்டில் இருந்தார்கள். நபி (ஸல்) விடம் தாய்வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டபோது கணவனுடன் வாழ்ந்த வீட்டிலேயே இருக்குமாறு நபி (ஸல்) உபதேசம் செய்த்தார்கள். 🔷 இந்த சம்பவத்தை கேட்டு புரையா பின்த் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 16

உசூலுல் ஹதீஸ் பாகம்-16 🔷உஸ்மான் (ரலி) யின் காலம் குரானை ஒன்று சேர்ப்பதற்கு அந்த காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 🔷 4987. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 15

உசூலுல் ஹதீஸ் பாகம்-15 🔷உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதற்கு பிறகு மிகப்பெரும் பிரச்சனைகள் பல உருவானது. உஸ்மான் (ரலி) வின் கொலைக்கு பின் அஹ்லுஸ்ஸுன்னாவினர் என்றும் பித்அத் வாதிகள் என்றும் 2 தரப்பினர் உருவானார்கள். 🔷இப்னு சீரின் (ரஹ்) கூறினார்கள் – உஸ்மான் (ரலி) யின் மரணத்திற்கு முன் அறிவிப்பாளர்களைப் பற்றி பேசப்படவில்லை ஆனால் உஸ்மான் (ரலி) யின் கொலைக்கு பின்னால் ஹதீஸுக்கு  யாரிடமிருந்து பெற்றார்கள் என்று கேட்டு அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னாவை …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 14

உசூலுல் ஹதீஸ் பாகம்-14 🔷உத்மான் (ரலி) காலத்தில் ஒரு மார்க்க விஷயத்தில் சர்ச்சை ஏற்பட்ட போது புரையா பின்த் மாலிக் (ரலி) கூறுகிறார்கள் எனது கணவர் சில காபிர்களை பின்னால் தேடிச்சென்றபோது கொல்லப்பட்டு விட்டார். ஆகவே நான் என்னுடைய சகோதரரின் வீட்டில் இருக்க அனுமதி கேட்டார்கள் அப்போது நபி (ஸல்) அனுமதி கொடுத்தார்கள். நபி (ஸல்) அனுமதி கொடுத்துவிட்டு பிறகு அவர்கள் செல்லும்போது மீண்டும் அழைத்து இத்தா காலம் முடியும் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 13

உசூலுல் ஹதீஸ் பாகம்-13 338. ‘ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், ‘நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 12

உசூலுல் ஹதீஸ் பாகம்-12 3156. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். நான் ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களுடனும் அம்ர் இப்னு அவ்ஸ்(ரஹ்) அவர்களுடனும் அமர்ந்திருந்தேன். அப்போது (அவர்கள் கூறினார்கள்:) முஸ்அப் இப்னு ஸுபைர்(ரஹ்) பஸராவாசிகளுடன் ஹஜ் செய்த ஆண்டான ஹிஜ்ரீ 70-ம் ஆண்டில் அவ்விருவரிடமும் ஸம் ஸம் கிணற்றின் படிக்கட்டின் அருகே பஜாலா(ரஹ்) அறிவித்தார். நான் அஹ்னஃப் இப்னு கைஸ்(ரஹ்) அவர்களின் தந்தையின் சகோதரரான ஜஸ்உ இப்னு முஆவியாவுக்கு எழுத்தராக …

Read More »