14வது படிப்பினை குற்றமின்றி தண்டனையில்லை. لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدً (النمل: 21) நிச்சயமாக அதற்கு நான் கடுமையான தண்டனை வழங்குவேன். சுலைமான் (அலை) அவர்கள் தொழுகைக்காக வுழூ செய்ய நாடிய சமயம் ஜின்கள் தண்ணீரை எடுப்பதற்காக அது இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஆற்றல் மிக்க ஹுத்ஹுதைத் தேடினார்கள், தனது அனுமதியின்றி அது சமூகமளிக்கத் தவறியதையறிந்ததும் அதனைத் தண்டிக்க முற்பட்டார்கள். ஏனெனில் அது தனது கடமையை நிறைவேற்றத் தவறியமையினால் முழுப் படையினதும் தொழுகையும் தாமதமாகக் காரணமாகிவிட்டது. அதனால் அது கடும் தண்டனைக்குள்ளாக நேரிட்டது. அவ்வாறே மற்றோரை நரகிலிருந்து பாதுகாத்து சுவர்க்கம் நுழைவிக்கும் பணியான அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, அவனது பாதையில் போர் செய்யாது ஏனைய காரியங்களில் இச்சமுதாயமும் ஈடுபட்டு விடுமேயானால் அதற்கும் அவனது தண்டனை இறங்கும். அல்லாஹ் கூறுகிறான்: (நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட புறப்படவில்லையானால் உங்களை நோவினை தரும் வேதனை செய்வான். மேலும் வேறு ஒரு கூட்டத்தைப் பகரமாகக் கொண்டு வருவான்.) (அத்தௌபா:39) இவ்வாறே குற்றம் செய்ததற்குத் தண்டனையாகவும், ஏனையோர் அவ்வாறு செய்வதைத் தடுக்குமுகமாகவும் குற்றவாளியைத் தண்டிப்பதும், அவனுக்கு அல்லாஹ் விதித்த தண்டனையை நிறைவேற்றாமலிருக்க எவருடைய சிபாரிசையும் ஏற்றுக் கொள்ளாமலிருப்பதும் ஆட்சியாளர் அல்லது அதிகாரியினது கடமையாகும். தனக்கும் இத்தண்டனை கிடைக்குமே என்று பயப்படும் பலவீனமான உள்ளங்களைத் தடுப்பதற்காக தண்டனையைப் பகிரங்கப்படுத்தவும் வேண்டும். எனவேதான் அல்லாஹ் கூறுகிறான்: ((அவ்விருவருடைய தண்டனையின் போது விசுவாசிகளின் ஒரு கூட்டம் சமூகமளிக்கட்டும்.)) ((அந்நூர்:02)) தொடரும்……
Read More »
December 20, 2015
தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
இஸ்லாமிய சிறப்புக் கருத்தரங்கம்
இஸ்லாமிய சிறப்புக் கருத்தரங்கம், இன்ஷா அல்லாஹ், 28:03:2014, வெள்ளிக்கிழமை, ஜும்மா முதல் மஃரிப் வரை.
Read More »(ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு – மண் அசுத்தத்தை போக்குமா?
தலைப்பு : மண் அசுத்தத்தை போக்குமா? வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:03:2014,
Read More »அகீதத்துத் தஹாவிய்யாஹ்-14
அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு, நாள்: 24:03:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, 21/03/014
ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, நாள் : 21:03:2014, இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், வில்லாபுரம், மதுரை.
Read More »-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் …
Read More » -
நபியவர்களுக்கு பிரார்த்திக்குமாறு அல்லாஹ் ஏவிய பிரார்ததனைகள்!
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |
-
நமது ஃபலஸ்தீன உறவுகளுக்காக
-
இறுதி நேரத்திலிருந்து அடக்கம் வரை உள்ள பிரார்த்தனைகள் | பாகம் 03 |